தமிழகம்

’அரசு வேலை கனவே போச்சு..’ நடுரோட்டில் உதவி ஜெயிலரை தாக்கிய மாணவி மீது பாய்ந்த வழக்கு!

மதுரையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக உதவி ஜெயிலரைத் தாக்கியதாக மாணவி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை: மதுரை மத்திய சிறையில் கைதியாக இருந்து விடுதலையான ஒருவர், மதுரை பைபாஸ் சாலை பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்த நிலையில், இந்த ஹோட்டலுக்கு சில நாட்களுக்கு முன்பு, மதுரை மத்திய சிறையில் உதவி ஜெயிலராக பணியாற்றி வரும் பாலகுருசாமி என்பவர் சென்றுள்ளார்.

அப்போது, அங்கிருந்த விடுதலையாகிச் சென்றவரின் மகளிடம் பேசியுள்ளார். மேலும் அங்கிருந்த அவரது பேத்தியான 14 வயது மாணவியிடம் பேசி, தனது செல்போன் எண்ணையும் கொடுத்து, பள்ளிப் படிப்புக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளுமாறு கூறியதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், உதவி ஜெயிலர் பாலகுருசாமி, அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு அம்மாணவியை தனியாக அழைத்ததாக கூறப்படுகிறது. எனவேஎ, இது குறித்து மாணவி, தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதன்படி, தனது தாத்தா, பாட்டி, சித்தி ஆகியோருடன் அந்த மாணவி, உதவி ஜெயிலர் அழைத்த இடத்திற்குச் சென்றுள்ளார்.

அப்போது அங்கு பைக்கில் வந்த பாலகுருசாமி, தன்னுடன் வாகனத்தில் வருமாறு மாணவியை அழைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டுள்ளார். பின்னர், உடனடியாக அங்கு ஓடி வந்த மாணவியின் சித்தி, தன் அக்காள் மகளிடம் பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட முயற்சி செய்ததாகக் கூறி, உதவி ஜெயிலர் பாலகுருசாமியை பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் வைத்து சரமாரியாக தாக்கினார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதனையடுத்து, பால குருசாமியை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஐஜி பழனி உத்தரவிட்டார். மேலும், மதுரை மாநகர தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பாலகுருசாமி கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: கல்வராயன்மலை வனத்துறைக்குச் சொந்தமான அரை ஏக்கரில் கஞ்சா சாகுபடி.. அதிர்ச்சியில் மக்கள்!

இந்த நிலையில், கரிமேடு காவல் நிலையத்தில் பாலகுருசாமி கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆரம்பம் முதலே திட்டமிட்டு தன்னிடம் பணம் பறிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பொய்யான காரணங்களை சிறுமியின் மூலம் கூறி, தன்னை போனில் அழைத்து பொதுவெளியில் வீடியோ எடுத்து, அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக உதவி ஜெயிலரைத் தாக்கிய மாணவி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் போலீசார் என்பதனால் வேண்டும் என்றே தன் மீது வழக்குப் பதிவு செய்ததாகவும், தற்போது அரசுப் பணிக்கு போட்டித் தேர்வு எழுத கடந்த 3 ஆண்டுகளாக முயற்சித்து வரும் நிலையில், தன் எதிர்காலத்தைச் சிதைக்க வேண்டும் என வழக்கு போடப்பட்டிருப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…

ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…

14 hours ago

ஹாரர் படத்தில் சிவகார்த்திகேயனா? புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்…

பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…

16 hours ago

கோவைக்கு செங்கோட்டையன் திடீர் வருகை… சரமாரி கேள்வி எழுப்பிய நிருபர்கள் : மவுனம் கலையுமா?!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…

16 hours ago

தனது பெயரை மூன்றேழுத்தாக சுருக்கிக்கொண்ட கௌதம் கார்த்திக்? ஏன் இப்படி?

திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…

16 hours ago

தக் லைஃப் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடி? எப்போனு தெரிஞ்சிக்கனுமா?

மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…

17 hours ago

மருமகனுடன் மாமியார் ஓட்டம்… மகளுக்காக வைத்திருந்த நகை, பணத்துடன் மாயம்!

உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…

18 hours ago

This website uses cookies.