தகாத உறவில் இருந்த நபருடன் அட்ஜஸ்ட் செய்து கொள் என தாயாரே கூறியதால் மகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை: தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்தில் அமைச்சு பணியாளராக பாக்யராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். அதே அலுவலகத்தில் அமைச்சு பணியாளராக பணியாற்றி வரும் பெண் ஒருவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் இருவரும் நெருங்கி பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், அந்தப் பெண் ஊழியர், தனது கணவருடன் விவாகரத்தாகி இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார்.
இதனிடையே, பாக்யராஜ் அந்த பெண் ஊழியரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த அக்டோபரில், வழக்கமாக பெண் ஊழியரின் வீட்டிற்கு வந்த பாக்யராஜ், அவர்களது மகள்களுக்கு பிரியாணி வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் அங்கு இருந்த அந்த பெண் ஊழியரின் கல்லூரி படிக்கும் 21 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, பாக்யராஜ் கன்னத்தில் அடித்து வெளியே விரட்டி விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், இது குறித்து தாயாரிடம் நடந்ததை கூறியுள்ளார். ஆனால், அவரது தாயோ பாக்யராஜிடம் அட்ஜஸ்ட் செய்து கொள் எனக் கூறியதால் அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவி, இது குறித்து எழும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: COME BACK கொடுத்தாரா சங்கர்…”கேம் சேஞ்சர்”படத்தின் திரை விமர்சனம் இதோ…!
இது தொடர்பான விசாரணை நடந்து கொண்டிருக்கையில், கல்லூரி மாணவி குறித்து பாக்ராஜ் அவதூறாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. எனவே, இது குறித்தும் கல்லூரி மாணவி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, நேற்று எழும்பூர் மகளிர் போலீசார் பாக்யராஜ் மற்றும் பெண் ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.