Categories: தமிழகம்

யாரு வேணா சாப்பாடு போடட்டும்.. ஆனா நீ போடக்கூடாது; அன்னதானம் வழங்குவதில் சாதிய பிரச்சினை..!

பாப்பிரெட்டிப்பட்டி அருகே தேர் திருவிழாவில் அன்னதானம் வழங்குவதில் ஏற்பட்ட சாதிய பிரச்சினை சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள இருளப்பட்டியில் காணியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. தேரோட்டம் நடைபெறுவதற்கு முன்பாக இந்த கோவிலில் கொடியேற்றத்திற்குப் பின்பு தினம் தோறும் ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு சமூகத்தைச் சார்ந்தவர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம்.

இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த கோவிலில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், நேர்த்தி கடன் செலுத்தும் வகையில் அன்னதானம் வழங்குவதற்காக சமையல் ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது, உயர்சாதியினர் நீங்கள் யார் எந்த ஊர் என்று விசாரித்து தாழ்த்தப்பட்ட மக்கள் என்பதை அறிந்து நீங்கள் எல்லாம் இன்றைக்கு அன்னதானம் வழங்க கூடாது என தெரிவித்து இன்று கொங்கு வேளாளர் கவுண்டர்கள் சார்பில் அன்னதானம் வழங்க வேண்டும், ஆனால் நீங்கள் எதற்காக அன்னதானம் வழங்குகிறீர்கள் என்று காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.

அங்கு வந்த காவல்துறையினர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் சமையல் செய்யும் இடத்திற்கு சென்று எரிந்து கொண்டிருந்த கேஸ் சிலிண்டர் எரிவாயுவை அணைத்தனர். பின்பு அவர்களை கோவிலுக்குள் நுழையக்கூடாது வெளியே செல்லுங்கள் என காவல்துறையினர் வெளியேற்றியுள்ளனர். சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான சமையல் பொருட்களை கொண்டு சென்று அன்னதானம் வழங்குவதற்காக செய்திருந்த பொருட்கள் அனைத்தையும் காவல்துறையினர் அடாவடி செய்து வாகனத்தில் ஏற்றி உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மனம் நொந்த தம்பதியினர் மீண்டும் கோவிலுக்கு அருகே உள்ள மண்டபம் ஒன்றில் அன்னதானம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டனர். சமூக நீதி என்று சொல்லக்கூடிய திராவிட மாடல் ஆட்சியில் அன்னதானம் வழங்குவதற்கு கூட சாதி மதம் பார்த்து செயல்பட்டு வருவதாகவும், அறநிலை துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் இந்த கோவிலில் இது போன்ற சாதிய பிரச்சனைகள் வருடம் தோறும் ஏற்படுவதாக இதனை அரசு நடவடிக்கை மேற்கொண்டு அடாவடியில் ஈடுபட்ட காவல்துறையினர் மீதும் அன்னதானம் வழங்குவதற்கு தடையாக இருந்த நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட தம்பதியினர் தெரிவித்தனர்.

Poorni

Recent Posts

தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?

படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…

14 minutes ago

2 மாதங்களாக கோவை சிறையில் விலகாத மர்மம்.. போலீசார் முக்கிய நகர்வின் பின்னணி!

கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…

42 minutes ago

தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…

1 hour ago

Uff… அந்த இடுப்பு இருக்கே : படுகிளாமரில் கீர்த்தி சுரேஷ்!

Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…

2 hours ago

புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…

2 hours ago

விடுமுறை நாளில் சென்சார் பண்ண வேண்டிய அவசியம் என்ன? எம்புரான் விவகாரத்தின் உண்மை பின்னணி இதுதான்- ஓபனாக போட்டுடைத்த பிரபலம்

மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…

2 hours ago

This website uses cookies.