சிவகங்கை அருகே காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து 20 அடி உயரத்திற்கு தண்ணீர் பீச்சி அடிக்கும் தண்ணீரில் செல்பி மக்கள் அலப்பறை செய்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே பட்டமங்கலம் செல்லும் சாலையில் கொட்டகுடி ஆற்று பாலத்தின் அருகில் காவேரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைந்து 20 அடி உயரம் வரை தண்ணீர பீச்சி அடித்து வருகிறது.
காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயிலிருந்து வெளியேறும் தண்ணீர் அருகில் உள்ள வயல்வெளிலும் கிராம பகுதியில் தேங்கி நிற்கிறது. பட்டமங்கலத்தில் இருந்து சொக்கநாதபுரம் செல்லும் அப்பகுதி மக்கள் இதை வேடிக்கை பார்ப்பதும், செல்பி எடுப்பதும் புகைப்படம் எடுப்பதுமாக ரசித்துச் செல்கின்றனர்.
குடிநீருக்காக பலரும் அவதி அடைந்து வரும் நிலையில், தண்ணீர் வீணாகி செல்வது காண்போரை வேதனையை உண்டாக்கியுள்ளது.
எனவே காவேரி கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் இதுபோன்ற குழாய் உடைப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…
வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…
கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…
எல்லாம் ஸ்பாட்ல வர்ரது பொதுவாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சியை படமாக்க ஸ்கிரிப்ட் படி செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் பல…
This website uses cookies.