தமிழகம்

சிபிசிஐடி வளையத்தில் பாஜக எம்பி.. அரை நாளாகத் தொடர்ந்த கிடுக்குப்பிடி விசாரணை!

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், புதுச்சேரி மாநிலங்களவை எம்பி செல்வகணபதியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

சென்னை: சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், புதுச்சேரி பாஜக எம்பியிடம் சிபிசிஐடி போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக சென்னை எழும்பூர் அலுவலகத்தில் ஆஜரான எம்பி செல்வகணபதியிடம், சுமார் 10 மணி நேரமாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, கடந்த 2024 ஏப்ரலில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது தாம்பரம் ரயில் நிலையம் வந்த நெல்லை விரைவு ரயிலில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக 4 கோடி ரூபாய் பணத்துடன் மூன்று பேர் பிடிபட்டனர். இவ்வாறு பிடிபட்ட நபர்கள், நெல்லை மக்களவையில் போட்டியிட்ட எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான, சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் பணியாற்றும் ஊழியர்கள் என்பது தெரிய வந்தது.

மேலும், அந்தப் பணத்தை நயினார் நாகேந்திரனுக்கான தேர்தல் செலவுக்காக எடுத்துச் சென்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஆனால், இதனை நயினார் மறுத்தார். இதனிடையே, இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, தமிழக பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகன், மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் மறும் தொழில் பிரிவு மாநிலத் தலைவர் கோவர்தன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதையும் படிங்க: சிறுமியின் உயிரை காவு வாங்கிய அரிசி… மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சோகம்!

இந்த நிலையில், புதுச்சேரி மாநில பாஜக தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான செல்வகணபதி, சென்னை சவுகார்பேட்டை பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் பங்கஜ் லால்வாணி மற்றும் சூரஜ் ஆகிய மூன்று பேரும், சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

11 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

12 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

12 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

12 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

13 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

13 hours ago

This website uses cookies.