Categories: தமிழகம்

லியோ படம் பார்க்கச் சென்றவருக்கு கத்திகுத்து… தியேட்டரில் கத்தி கூச்சலிட்டதால் வந்த மோதல்.. 3 பேர் கைது!!

கோவை ; மேட்டுப்பாளையத்தில் லியோ திரைப்படம் பார்க்க சென்ற போது, தியேட்டரில் கத்தி கூச்சல் விட்டதால் இளைஞர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அப்படத்தினை காண பொதுமக்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். இத்திரைப்படம் மேட்டுப்பாளையம் சிவம் தியேட்டரில் திரையிடப்பட்டுள்ளது. நேற்று இரவு இந்தப் படத்தை பார்ப்பதற்காக மேட்டுப்பாளையம் ராமேகவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்த விஜய் (23) என்பவர் வந்துள்ளார்.

அதேபோல, மேட்டுப்பாளையம் சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (21), மேட்டுப்பாளையம் மணி நகர் பகுதியை சேர்ந்த அஸ்வின் (21), சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்த மாதவன், சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்த விஜய் (18) ஆகியோரும் வந்துள்ளனர். படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது பிரபாகரன் மற்றும் அவனது நண்பர்கள் உற்சாகத்தில் தியேட்டரில் கத்தி கூச்சல் இட்டுள்ளனர்.

இதனால், எரிச்சல் அடைந்த விஜய் பிரபாகரன் மற்றும் அவனது நண்பர்களை தட்டி கேட்டுள்ளார். இதனால் பிரபாகரன் நண்பர்கள் மற்றும் அவரது நண்பர்களான விஜய் உள்ளிட்ட நான்கு பேர் சேர்ந்து ராமேகவுன்டன்புதூரில் இருந்து வந்த விஜயிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது அருகில் இருந்தவர்கள் இவர்களை சமாதானம் படுத்தியுள்ளனர்.

இருப்பினும் படம் முடிந்து வெளியே வரும் போது மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த பிரபாகரன், விஜய், அஸ்வின் மற்றும் மாதவன் ஆகியோர் விஜயை கையால் அடித்து துன்புறுத்தியதுடன், மறைத்து வைத்திருந்த கத்தியால் முதுகில் குத்தியுள்ளனர். இதனால் விஜயக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, விஜயை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் விஜய் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில், மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், உதவி ஆய்வாளர் செல்வநாயகம் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கத்தியால் குத்திய பிரபாகரன், அஸ்வின், மாதவன் என 3 பேர் கைது செய்யப்பட்டு, மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர் செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், தப்பியோடிய விஜய் தேடி வருகின்றனர். இச்சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

கேமியோ ரோலில் பிரபல தெலுங்கு நடிகர்..”ஜெயிலர் 2″ சம்பவம் லோடிங்.!

நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…

40 minutes ago

“WHAT BRO”நான் குல்லா போடுற ஆள் இல்லை..மேடையில் விஜயை தாக்கிய பிரபலம்.!

வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…

2 hours ago

மருமகள், பேத்தியையும் விட்டுவைக்கவில்லை.. மாமியாருடன் சேர்ந்து செய்த பகீர் காரியம்!

கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…

2 hours ago

சர்ப்ரைஸ்.! ‘குட் பேட் அக்லி’ பட ரிலீஸில் ட்விஸ்ட்…தமிழில் இதுவே முதல்முறை.!

தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…

3 hours ago

எங்களுக்கு எந்த நிலத்தகராறும் இல்லை.. பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த செளந்தர்யா கணவர்!

சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…

3 hours ago

மரண மாஸ்.!மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் ரஜினிகாந்த்.!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி! நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர்-2 திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக…

4 hours ago

This website uses cookies.