Categories: தமிழகம்

குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமிராக்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்: கோவை மாவட்ட கமிஷனர் உத்தரவு..!!

கோவை: கோவை மாநகரில் கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்ய போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தகவல் கூறியதாவது, கோவை மாநகரில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்கவும், குற்றச் சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும், குற்றவாளிகளை எளிதில் கண்டறியும் மாநகரப் பகுதிகளில் போலீசார் பொதுமக்கள் இணைந்து கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வருகின்றனர்.

மாநகர் முழுவதும் 23 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டில் உள்ளன. சாலை போக்குவரத்து சிக்னல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் சில எண்ணிக்கையிலான கேமராக்கள் மாநகர போலீசாரின் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன.


கண்காணிப்பு கேமராக்கள் பெரும்பாலானவை பயன்பாடின்றி உள்ளன தற்போதைய சூழலில் குற்றச் சம்பவங்களை தடுக்கவும் குற்றவாளிகளை கண்டறியவும் கண்காணிப்பு கேமராக்கள் பங்களிப்பு அவசியம் எனவே காவல்துறையினர் முன்னரே பொருத்தியுள்ள கண்காணிப்பு கேமராக்களின் நிலையை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என போக்குவரத்து துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில மாதங்களில் மட்டும் 3000க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் பயன்பாடு குறித்து ஆய்வு செய்ய அந்தந்த போலீஸ் நிலையங்களில் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டுள்ளன. ஒரு வாரம் இந்த ஆய்வு பணி மேற்கொள்ளப்படும் பழுதடைந்த முறையான இயங்காத கண்காணிப்பு கேமராக்கள் மீண்டும் முழு பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தி தகவல் குறிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

UpdateNews360 Rajesh

Recent Posts

டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்

இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…

2 hours ago

என் மேலயே புகார் கொடுக்கறயா.. காவல் நிலையத்தில் புகுந்து நபரை செருப்பால் அடித்த எம்எல்ஏ! (வீடியோ)

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…

3 hours ago

கொலை மிரட்டல் கொடுத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : கோவையை அலற விட்ட மத போதகர்!

கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…

4 hours ago

சமையல் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு : மத்திய அரசு அறிவிப்பு.. சாமானிய மக்கள் ஷாக்!

சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…

4 hours ago

கள்ளக்காதலனை வைத்து நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்.. காக்கிச் சட்டைகளை கைக்குள் மடக்கிய ஹேமலதா!

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…

4 hours ago

“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?

மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…

5 hours ago

This website uses cookies.