தமிழகம்

திருப்பதிக்கு சென்ற மதுரை மூதாட்டி மாயம்… வனப்பகுதிக்குள் வழிதவறி சென்ற சிசிடிவி காட்சி வைரல்!

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா சல்லுப்பாபட்டி கிராமத்தைச் சேர்ந்த 64 வயது பாட்டி வெள்ளத்தாய். வெள்ளதாய் தன்னுடைய மகன் மாரியப்பன் மற்றும் குடும்பத்தினர் ஆகியோரோடு கடந்த பத்தாம் தேதி திருப்பதி மலைக்கு வந்திருந்தார்.

சாமி கும்பிட்டு லட்டு பிரசாதம் வாங்க அவர்கள் சென்று இருந்த போது இயற்கை உபாதைகளுக்காக தனியாக சென்ற வெள்ளத்தாய் அதன் பின் திரும்பி வரவில்லை.

மாரியப்பன் மற்றும் அவருடைய குடும்பத்தார் திருப்பதி மலை முழுவதும் அவரை தேடிப்பார்த்தும் கிடைக்காத நிலையில் திருமலை காவல் நிலையத்தில் வெள்ளத்தாய் காணாமல் போனது பற்றி புகார் அளித்தனர்.

இதையும் படியுங்க: முதல்முறையாக களத்தில் மக்களைச் சந்திக்கிறார் விஜய்.. ஆட்டம் காணுமா தமிழக அரசியல்?

மாரியப்பன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பகுதி செய்த போலீசார் திருப்பதி மலையில் வெள்ளத்தாய் நடமாட்டம் தொடர்பாக பதிவாகி இருக்கும் சிசிடிவி பதிவு காட்சிகளை கைப்பற்றி தீவிரமாக அவரை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் அவர் திருப்பதி மலையிக் இருந்து பாபநாசம் செல்லும் வழியில் அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள குப்பை கிடங்கிற்கு செல்லும் வழியில் நடந்து சென்று கொண்டிருந்தது சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் சிறுத்தைகள், ஓநாய்கள் ஆகிய பயங்கர வனவிலங்குகளின் நடமாட்டம் இருபது குறிப்பிடத்தக்கது. அந்த பகுதியில் வெள்ளத்தாயை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நழுவிய செந்தில் பாலாஜி.. காத்திருக்கும் ED.. பாஜக செக்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…

5 minutes ago

யாரும் இத மட்டும் பண்ணிராதீங்க..மனோஜ் இறந்ததற்கு காரணம் வேற..தம்பி ராமையா உருக்கம்.!

தம்பி ராமையாவின் உருக்கமான கருத்து தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான பணியைச் செய்து வந்த நடிகரும்,இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா,திடீர் மரணமடைந்த…

13 minutes ago

கலங்கி நின்ற விவசாயி.. கூண்டோடு வந்த வனத்துறை.. கோவையில் தொடரும் சிறுத்தை அச்சம்!

கோவையின் மதுக்கரை அடுத்த பகுதியில் ஆட்டைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர்: கோவை…

1 hour ago

வருங்கால CM புஸ்ஸி ஆனந்த்.. கைவிரித்த ECR சரவணன்.. நடந்தது என்ன?

’வருங்கால CM’ என தவெக பொதுச் செயலாளர் பெயரைக் குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டருக்கு புஸ்ஸி ஆனந்த், ECR சரவணன் விளக்கம்…

2 hours ago

வரலாறு காணாத உச்சம்.. ஒரே நாளில் ரூ.840 உயர்வு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (மார்ச் 28) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 105 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 340…

3 hours ago

பரிதவித்த சூப்பர் சிங்கர் போட்டியாளரின் அம்மா..ஓடி வந்த ‘ராகவா லாரன்ஸ்’..குவியும் பாராட்டு.!

கொடை வள்ளல் ராகவா லாரன்ஸ்.! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மிகுந்த வரவேற்பை…

15 hours ago

This website uses cookies.