Categories: தமிழகம்

ஓடும் ரயிலில் இருந்து கல்லூரி மாணவியிடம் செல்போன் பறிப்பு… தடுமாறி விழுந்த மாணவி : உருக்குலைந்த தலைநகரம்!!!

சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. 8 பெட்டிகளை கொண்டதாக இயக்கப்படும் இந்த ரயில்களில் பீக் நேரங்களில் தவிர பிற நேரங்களில் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருக்கும்.

மிகவும் பிரம்மாண்டமாக காணப்படும் ரயில் நிலையங்களில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை என்பது பயணிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களில் ஒன்றாக உள்ளது.

பயணிகள் பாதுகாப்புக்காக போலீசார் போதிய அளவில் ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை என்பதோடு சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட வசதிகள் கூட பல ரயில் நிலையங்களில் இல்லை என்பதே பயணிகள் கருத்தாக உள்ளது.

இதனால், சட்ட விரோத செயலில் ஈடுபடும் நபர்களின் நடமாட்டமும் அதிகரித்து இருப்பதாக சொல்லப்படும் நிலையில், கடந்த 2 ஆம் தேதி பறக்கும் ரயிலில் சென்று கொண்டிருந்த மாணவியிடம் செல்போன் பறிக்க கொள்ளையர்கள் முயன்றனர்.

இதில் தடுமாறி கீழே விழுந்த மாணவி சிகிச்சை பலனிளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

இந்த சோக சம்பவம் குறித்து விசாரணையில், கோட்டூர் புரத்தை சேர்ந்த மாணவி பிரீத்தி கடந்த 2 ஆம் தேதி கடற்கரையில் இருந்து வேளச்சேரி நோக்கி வந்த பறக்கும் ரயிலில் சென்று கொண்டு இருந்தார்.

ரயில் இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே வந்த போது மாணவியிடம் இருந்து செல்போனை பறித்த இரு நபர்கள் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடினார்.

செல்போன் பறிப்பின் போது ரயிலில் இருந்து தடுமாறி ப்ரீத்தி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த மாணவி ப்ரீத்தி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த திருவான்மியூர் ரயில்வே போலீசார், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பழைய சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் பெயர்களையும் ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் சென்னை பட்டினப்பாகத்தை சேர்ந்த விக்னேஷ், அடையாரை சேர்ந்த மணிமாறன் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் தான் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
அவர்களிடம் இருந்து மாணவியின் செல்போனும் கைப்பற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஓ கொரளி வித்தையா? விஜய் ரசிகர்களை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்! ரவுண்டு கட்டிட்டாங்க…

விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…

13 minutes ago

அஜித் படத்தை காப்பியடித்த ஹாலிவுட்…? அப்பட்டமான காப்பி : அதுவும் இந்த படமா?

சமீபத்தில், பிரபலமான ஹாலிவுட் வெப் தொடரான Wednesday சீசன் 2-ன் டிரெய்லர் வெளியாகி, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…

30 minutes ago

விஜய் நடத்திய ரோடு ஷோ… கேரவன் மீது ஏறிய தொண்டர்கள் : ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!

கோவை விமான நிலையத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையும் படியுங்க:…

59 minutes ago

அங்க Focus பண்ணுங்க: மைதானத்தில் திடீரென தோன்றிய அஜித்-சிவகார்த்திகேயன்; நம்பவே முடியலையே!

சோகத்தில் சென்னை ரசிகர்கள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. 43…

2 hours ago

கொஞ்சம் கூட யோசிக்கல.. மனைவியை கிணற்றில் தள்ளிய கணவன்… எதிர்பாரா டுவிஸ்ட்!

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…

2 hours ago

இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…

18 hours ago

This website uses cookies.