தமிழகம்

கிளாஸ் ரூமில் பேசியதால் வாயில் டேப்.. ஒத்துக்கொண்ட ஒரத்தநாடு ஆசிரியர்!

தஞ்சை ஒரத்தநாடு அருகே அரசுப் பள்ளியில் மாணவர்களின் வாயில் டேப் ஒட்டப்பட்டது குறித்து கல்வி அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (நவ.11) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், ஒரத்தநாடு அருகே உள்ள அய்யம்பட்டி கிராம மக்கள் பங்கேற்று புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் அவர்கள் வைத்த குற்றச்சாட்டு, தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

மேலும், அந்த புகாரில், “கடந்த அக்டோபர் 21ஆம் தேதி, ஒரத்தநாடு ஒன்றியத்துக்கு உட்பட்ட அய்யம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில், 4ஆம் வகுப்பு படிக்கும் 5 மாணவர்களின் வாயில் செலோ டேப் ஒட்டி 2 மணி நேரமாக உட்கார வைத்துள்ள விவரம் தற்போது தெரிய வந்தது. இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியரிடம் கேட்டதற்கு, அவர் எங்களுக்கு உரிய பதில் அளிக்கவில்லை. எனவே, இது குறித்து விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்து இருந்தனர்.

இதனையடுத்து, இது தொடர்பாக பிரபல நாளிதழிடம் பேசிய பள்ளித் தலைமையாசிரியை புனிதா, “வகுப்பில் யாரும் பேசக் கூடாது என்பதற்காக வாயில் ‘செலோ டேப்’ ஒட்டி உள்ளனர். அந்த வகுப்புக்கு நான் சென்ற போது, ஒரு மாணவரின் வாயில் மட்டும் ‘டேப்’ ஒட்டப்பட்டிருந்தது. அதை உடனடியாக அகற்றுமாறு நான் கூறினேன்.

மாணவர்கள் வாயில் ‘டேப்’ ஒட்டப்பட்டு இருந்ததை புகைப்படம் எடுத்தது யார் என எனக்குத் தெரியவில்லை. என்னிடமும், மாணவர்களிடமும் வட்டாரக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார். அவரிடம் எனது முழு விளக்கத்தையும் தெரிவித்து உள்ளேன்’’ எனக் கூறி உள்ளார்.

இதையும் படிங்க: என்ன யோக்கியதை இருக்கு.. சீமானை மீண்டும் வெளுத்து வாங்கிய விஜயலட்சுமி!

மேலும், இது தொடர்பாக பேசி உள்ள மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதியழகன், “அக்டோபர் 21ஆம் தேதி அன்று, குறிப்பிட்ட அந்த வகுப்பில் ஆசிரியர் இல்லாததால், ஒரு மாணவரை வகுப்பறையை கவனித்துக் கொள்ளும்படி கூறி உள்ளனர். அந்த மாணவர் தான், வகுப்பறையில் பேசிய மாணவர்களின் வாயில் ‘டேப்’ ஒட்டி உள்ளார்.

எனவே, ஆசிரியர்கள் யாரும் மாணவர்களின் வாயில் டேப் ஒட்டவில்லை. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை தர வட்டாரக் கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார். மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Hariharasudhan R

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

5 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

5 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

7 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

7 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

7 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

8 hours ago

This website uses cookies.