கோவை : குனியமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த நான்கு இளைஞர்களை கைது செய்த போலீசார் 14 செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.
கோவை குனியமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான சுகுணாபுரம் கோவைப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி செல்போன் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி வந்தநிலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு போலீசார் கோவைப்புதூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வந்த 4 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் நால்வரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததோடு தப்பிக்கவும் முயற்சித்தனர். இதனிடையடுத்து அவர்களை விரட்டிப்பிடித்த போலீசார், அவர்களிடம் நடத்திய விசாரணையில் நால்வரும் , அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்த ஜிஜோ, ஹக்கீம், சிவா, கோகுல் அபிஷேக் என்பதும் நால்வரும் அப்பகுதிகளில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 14 செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.