தேநீர் கடையில் வாங்கிய வடையில் பூரான் இருந்ததால் கேள்வி கேட்ட வாடிக்கையாளரிடம் அலட்சியமாக பதில் சொன்னதால் ரெய்டு வந்த அதிகாரிகள்
திண்டுக்கல் என் ஜி ஓ காலனி பகுதியைச் சேர்ந்தவர் பியூலா. இவர் தனது உறவினர் அஸ்வதி மற்றும் தனது மகனை அழைத்துக் கொண்டு NGO காலனி மெயின் ரோட்டில் உள்ள ஜம்ஜம் தேநீர் கடையில் வடை கேட்டுள்ளனர்.
கடையில் பணி செய்பவர்கள் வடையில் குருமா ஊற்றி கொடுத்துள்ளனர் தனது மகனுக்கு வாங்கிய வடையை ஊட்டியுள்ளார் அப்போது வடையில் பூரான் இருந்ததைப் பார்த்த பியூலா மற்றும் அஸ்வதி இருவரும் கடை உரிமையாளரிடம் வடையில் பூரான் இருந்தது பற்றி கேட்டுள்ளனர்.
அப்போது கடை உரிமையாளர் இவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தரக்குறைவாக பேசியுள்ளார். உங்கள் வீட்டில் பூரான் இல்லையா என பேசியுள்ளார்.
இதையடுத்து பியூலா தனது மகனுக்கு எதுவும் ஆகி விடக்கூடாது என பயத்தில் திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக மகனை சேர்த்துள்ளார் மேலும் திண்டுக்கல் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தகவல் கூறியுள்ளார்
இதை எடுத்து திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செல்வம் தலைமையிலான அதிகாரிகள் குழு ஜம்ஜம் பேக்கரிக்கு நேரில் சென்று வடைக்கு தயார் செய்யப்பட்ட மாவு மற்றும் அதன் குருமா உள்ளிட்டவைகளை ஆய்வுக்காக எடுத்துக் கொண்டு மீதி இருந்ததை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்
திண்டுக்கல் நகர் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளில் பொதுமக்கள் சாப்பிடும் உணவுகள் தரமாக உள்ளதா என அவ்வப்போது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
அப்படி ஆய்வு செய்தால் மட்டுமே உணவு தரமான உணவாக பொதுமக்களுக்கு கிடைக்கும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.