Categories: தமிழகம்

எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் வழங்கிய மத்திய அரசு : ஒரே ஒரு கடிதம்.. ஒட்டுமொத்த அதிமுகவினரும் மகிழ்ச்சி!!!

எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்து மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது அதிமுகவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் என்பது நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய சட்டத்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்து வருகிறது.

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எல்லாம் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். அந்த அடிப்படையில் அனைத்து கட்சிகளிடமும் ஆலோசனை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அதிமுகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கிய விஷயமாக அதிமுகவினுடைய பொதுச் செயலாளர் என்ற முறையில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு இந்த கடிதமானது அனுப்பப்பட்டுள்ளது.

அதிமுகவின் பொது செயலாளர் என்ற முறையில் ஈபிஎஸ் அவர்களுக்கு கடிதம் ஆனது அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய சட்டத்துறை அமைச்சகம் ஈபிஎஸ் அவர்களை அதிமுகவினுடைய பொதுச் செயலாளராக அங்கீகரித்ததாக இதை கருத வேண்டி இருக்கிறது.

அதிமுகவினுடைய பொதுச் செயலாளர் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது தான் இதில் மிக முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அதிமுகவில் யார் தலைமை என்ற விவகாரம் இன்னமும் நீடித்து வரும் நிலையில் மத்திய சட்டத்துறை அமைச்சகம் இபிஎஸ் அவர்களை அதிமுகவினுடைய பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு கடிதம் அனுப்பியது மிக முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது..

சமீபத்தில் அதிமுகவினுடைய தேர்தல் செலவினங்களை தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது. ஓபிஎஸ் ஒருபுறம் தான் தான் அதிமுகவின் தலைமை என்று இன்னும் கூறி வரக்கூடிய நிலையில் மத்திய சட்டத்துறை அமைச்சகத்தினுடைய அங்கீகாரம் என்பது எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்துள்ளது மிக ஒரு முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஐபிஎல் வரலாற்றில் அசாத்திய சாதனை.. 14 வயது வீரருக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவித்த அரசு!!

நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடந்தது, அதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி…

27 minutes ago

நடுக்காட்டில் பிரபல நடிகர் சடலமாக மீட்பு : சதி திட்டம் போட்ட நண்பர்கள்? பகீர் பின்னணி!

ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…

2 hours ago

நீங்களாம் என் படத்தை பார்க்க கூடாது- மேடையில் எச்சரித்த நானி பட இயக்குனர்! என்ன காரணமா இருக்கும்?

நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…

2 hours ago

திமுக நிகழ்ச்சியில் பீர் பாட்டிலுடன் கறி விருந்து.. இளைஞரணி நிர்வாகி மறுப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…

2 hours ago

திடீரென சமந்தாவுக்கு உருவான கோவில்! பிறந்தநாளில் இப்படி ஒரு சம்பவமா?

டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…

3 hours ago

சிக்னலுக்காக காத்திருந்த ரயிலுக்குள் புகுந்த கும்பல்… கத்தியை காட்டி நகை, பணம் கொள்ளை!

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…

3 hours ago

This website uses cookies.