Categories: தமிழகம்

இந்தியை கற்றுக்கொள்வதில் தவறில்லை.. ஆனால் கட்டாயமாக்குவதுதான் தவறு : மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் பேச்சு!!

திருவாரூர் : இந்தியை கற்றுக் கொள்வதில் எந்த தவறும் இல்லை அதனை கட்டாய மொழியாக்குவது தவறு என மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கூறியுள்ளார்.

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் மோடி@20 புத்தகம் குறித்த கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கழகத்தின் முன்னாள் சேர்மன் கனகசபாபதி மற்றும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு புத்தகத்தின் சிறப்புகள் குறித்து மாணவர்களிடம் கலந்துரையாடினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கிருஷ்ணன் கூறியதாவது, இந்தி மொழி தமிழகத்தில் அவசியமா என்ற கேள்விக்கு, தமிழ் மொழி தாயைப் போன்றது அதனை என்றும் நாம் மறக்க முடியாது. தாய் மொழி இல்லை என்றால் நாம் வாழ்க்கையில் முன்னேற முடியாது.

அதே நேரத்தில் இந்தியாவில் நாம் பல்வேறு இடங்களுக்கு செல்லும் பொழுது இந்தியை கற்றுக் கொள்வதில் எந்த தவறும் இல்லை அதனை கட்டாய மொழியாக்குவது தவறு என்பது என்னுடைய கருத்து. மேலும் கூறுகையில் நாளை தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வு தொடங்குகிறது.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் 534 மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள் நம்முடைய கிராமத்து மாணவர்கள் வெளியே எங்கும் செல்லாமல் தேர்வு எழுதுவதற்கு நாம் அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளோம். 10 தினங்களுக்கு இந்த நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் 30 முதல் 40% வரை வெளி மாநில மாணவர்கள் பயின்று வருகின்றனர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மாணவர்கள் பயின்று வருகிறார்கள் மற்ற மாநிலங்களில் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு தேவையான நுழைவுத் தேர்வு குறித்த பாடம் எடுக்கப்படுகிறது.

ஆனால் அது நம்மிடம் இல்லை. அதே நேரத்தில் இந்த வருடம் மத்திய பல்கலைக்கழகத்தில் அதனை தொடங்கியுள்ளோம். தமிழ் மொழி மூலம் தேர்வு எழுதும் வசதியை தொடங்கி உள்ளோம். நுழைவுத் தேர்வை நாங்கள் எப்படி பார்க்கிறோம் என்றால் பல்வேறு மாநிலங்களில் இருந்து மத்திய பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசையில் வருகிறார்கள்.

ஆனால் இவர்களுடைய மதிப்பெண்கள் வேறு வேறாக உள்ளன. அவர்களை ஒருங்கிணைப்படுத்துவதற்கு ஒரு நுழைவுத் தேர்வு தேவைப்படுகிறது. இந்த முறை தமிழகத்தில் மாணவர்களுக்கு சிபிஎஸ்சி பாடத்திட்டங்களுக்கு நிகராக தமிழக மாணவர்களுக்கும் பாடத்திட்டங்கள் எடுக்கப்பட்டு வருகிறது.

உயர்கல்வி கிராமங்களுக்கு சென்று போய் சேர வேண்டும் கிராமத்தில் உயர் கல்வி இல்லை என்றால் அந்த உயர் கல்வி இந்த நாட்டிற்கு தேவை இல்லை அது தான் என்னுடைய கருத்து என தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

1 day ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

1 day ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

1 day ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

1 day ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

1 day ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

1 day ago

This website uses cookies.