கரூரில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட திருடனை பொதுமக்கள் அடித்து துவைத்து போலீசில் ஒப்படைத்த சிசிடிவி காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு, சோழன் நகர் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மனைவி சரஸ்வதி (48). சரஸ்வதி நேற்று காலை சுமார் 7 மணியளவில் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது, எஸ்.பி காலனி பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களில் ஒருவர், சரஸ்வதி அணிந்திருந்த தங்க சங்கிலியை அறுத்துவிட்டு இருசக்கர வாகனத்தை நோக்கி ஓடிவந்துள்ளார்.
அப்போது, அந்த வழியாக வந்த பொதுமக்கள் இந்த பார்த்துவிட்டனர். இதன் காரணமாக இருசக்கர வாகனத்தை இயக்கி வந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடி வந்த கொள்ளையனை பொதுமக்கள் பிடித்து அடித்து துவைத்து வெங்கமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அந்த நபர் தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளை ஊரணியை சேர்ந்த எட்வின் ராஜ் (38) என்றும், பல்வேறு திருட்டு சம்பவங்களில் கைதான நபர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், தப்பி ஓடிய மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…
சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…
This website uses cookies.