கன்னியாகுமரி : சுசீந்திரம் அருகே டூவிலரில் சென்ற இளம்பெண்ணை தாக்கி தங்க நகையை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டம் கொட்டாரம் அடுத்துள்ள வடுகன்பற்று பகுதியைச் சேர்ந்தவர் மதுவர்தினி (20). இவர் தனது தாயார் ரேணுகாவுடன் டூவிலரில் இருளப்பபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றார். பின்னர் இருவரும் டூவிலரில் இரவு வீட்டிற்கு திரும்பினார்கள். சுசீந்திரம் புறவழிச் சாலையில் வந்து கொண்டிருந்தபோது டூவிலரில் வந்த மர்ம நபர்கள் மதிவர்தினி மொபட் மீது மோதினார்கள்.
இதில், மதுவர்தினி, ரேணுகா இருவரும் நிலை தடுமாறி தவறிக் கீழே விழுந்தனர். உடனே மர்ம நபர்கள் மதுவர்தினி கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்தனர். இதையடுத்து அவர் கூச்சலிட்டார். அதற்குள் மர்ம நபர்கள் நகையை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து ரேணுகா சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கொள்ளையர்கள் குறித்த அடையாளங்களை கேட்டறிந்த போலீசார் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அந்த பகுதி முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.