சந்திராயன் விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் நிலவின் தென்பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது. Soft Landing முறையில் தரையிறக்கப்பட்ட அந்த நிகழ்வை இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் பார்த்து மகிழ்ந்தனர்.
இந்நிகழ்வு குறித்து பல்வேறு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அதுமட்டுமின்றி விக்ரம் லேண்டர் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் வெற்றிகரமாக நிலவின் தென்பகுதியில் தரையிறங்க வேண்டுமென பல்வேறு மக்கள் பிரார்த்தனைகள் மேற்கொண்டனர்.
அந்நிகழ்வின் தகவல்கள் புகைப்படங்கள், வீடியோக்களை இஸ்ரோ பகிர்ந்தது. அவை பல்வேறு இடங்களில் ஒளிப்பரப்பும் செய்யப்பட்டது.
அதன்படி கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஒளித்திரை டவரில் (MEDIA TREE) அந்நிகழ்வு ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. இதனை பள்ளி கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் பார்த்து கைத்தட்டி வெற்றியை கொண்டாடினர்.
அதில் ஒரு முதியவர் கையில் தேசிய கொடி ஏந்தியபடி வந்து வந்தே மாதரம் முழக்கங்களுடன் மகிழ்ச்சியை வெளிபடுத்தினார். மேலும் டவுன்ஹால் பகுதியை சேர்ந்த நந்தன கிருஷ்ணன் என்ற எட்டாம் வகுப்பு பயிலும் சிறுவன் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…
5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு தமிழ் மற்றும் கன்னட திரைப்பட நடிகையுமான சஞ்சனா கல்ராணி, 2020ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில்…
This website uses cookies.