Categories: தமிழகம்

லஞ்சம் வாங்கிக்கொண்டு போலி ஆவணம் மூலம் பட்டா மாற்றம் : அரசு அதிகாரிகளை கண்டித்து பாதிக்கப்பட்டவர் தனியாளாக தர்ணா!!

விழுப்புரம் அருகே வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் பெற்றுக் கொண்டு போலி ஆவணம் மூலமாக பட்டா மாற்றப்பட்டுள்ளதாக இளைஞர் தர்ணாவில் ஈடுபட்டார்.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுக்காவுக்கு உட்பட்டது ஆலம்பாடி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராமநாதன் என்பவரது மகன் வைத்தியநாதன்.

இவர் தற்போது கோயம்புத்தூரில் பணி செய்து அங்கேயே தங்கி வசித்து வருகிறார். இந்த நிலையில், வைத்தியநாதனுக்கு சொந்தமான பூர்வீக நிலமானது அவரது தாத்தா பெயரிலிருந்து அவர் இறப்புக்கு பின்னர் தனது மகன் வழி பேரன் அல்லது பேத்திக்கு வழங்க வேண்டும் என உயில் எழுதி வைத்ததாக கூறப்படுகிறது.

இந்த உயிலை முற்றிலுமாக மறைத்துவிட்டு வைத்தியநாதனின் தகப்பனார் ராமநாதன் அவரது தம்பி சீனிவாசன் என்பவருக்கு பணம் பெற்றுக் கொண்டு விற்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து வைத்தியநாதன் பலமுறை கண்டாச்சிபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தும், அங்குள்ள கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த சீனுவாசன் என்பவர், வைத்தியநாதனின் உறவினருக்கு சாதகமாக பணத்தைப் பெற்றுக் கொண்டு செயல்படுவதாக கூறி வைத்தியநாதன் இன்று திடீரென கண்டாச்சிபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நீதி வேண்டி தர்ணாவில் ஈடுபட்டார்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கண்டாச்சிபுரம் காவல் நிலைய போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட வைத்தியநாதனை வருவாய் வட்டாட்சியரிடம் அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் தர்ணாவை கைவிட்ட வைத்தியநாதன், பணத்தைப் பெற்றுக் கொண்டு, அரசு அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் தன்னிடம் உள்ள ஆவணங்களை சரி பார்க்காமல் அலைகழிப்பதாகவும் கூறி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவத்தால் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் பதட்டமாக காணப்பட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

12 hours ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

13 hours ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

14 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

15 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

16 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

17 hours ago

This website uses cookies.