கோவை ராக்கிப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் ஷாமல் பாரா. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அவர் பணி முடிந்து சென்று கொண்டிருக்கையில், வழியில் அமர்ந்திருந்த இரண்டு இளைஞர்கள் அவரிடம் செல்போனை தரும்படி மிரட்டியுள்ளனர்.
ஆனால் அவர் செல்போனை தராமல் அங்கிருந்து ஓடி அருகில் இருந்த ஒரு வீட்டில் தஞ்சம் புகுந்தார். இருப்பினும் அந்த இளைஞர்கள் அவரை மரக்கட்டையால் தாக்கிவிட்டு செல்போனை பறித்து சென்றனர்.
இதில் படுகாயம் அடைந்த அவர், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சையாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலைப்பகுதியில் ஆறு தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த துடியலூர் காவல்துறையினர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட துடியலூர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணா(21) மற்றும் சூர்யா(19) ஆகிய இரண்டு இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.