செங்கல்பட்டு ; தாம்பரம் அருகே நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நிர்வாகியின் கார் மீது முட்டை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக பட்டியல் அணி செயற்குழு உறுப்பினராக இருப்பவர் பக்தவச்சலம். இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்தநாள் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக வந்தார்.
கருத்தரங்கம் முடிந்த பின்னர் வெளியே சென்று அவரது காரை பார்த்தபோது, கார் முழுவதும் முட்டை, தக்காளிகள் வீசப்பட்டும், காரை சேதப்படுத்தியபடியும் இருந்தது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு 100க்கும் மேற்பட்ட பாஜவினர் ஒன்று திரண்டனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்த தாம்பரம் காவல் நிலைய போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பின்னர் காவல் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு மாவட்டத் தலைவர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் தலைமையில் பாஜகவினர் சம்பவம் குறித்து தாம்பரம் மாநகர காவல் துணை ஆணையர் அதிவீரபாண்டியனிடம் புகார் அளித்தனர்.
புகாரை பெற்றுக் கொண்ட துணை ஆணையர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக ஊழல் பட்டியலை வெளியிட்டிருந்த நிலையில், நடந்த இந்த சம்பவம் தாம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.