செங்கல்பட்டு : செங்கல்பட்டு அருகே பட்டப்பகலில் திருட்டு நகை வாங்க மறுத்த கடை உரிமையாளரை இளைஞர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மாமண்டூர் ஜிஎஸ்டி சாலையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கேசாராம் என்பவரது மகன் தர்மாராமன் செட் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக நகை கடை வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் தர்மாராம் சேட் கடையை திறந்தபோது வடபாதி கிராமம் புதிய காலனி பகுதியை சேர்ந்த சாம்மூர்த்தி என்பவருடைய மகன் சிலம்பரசன் நகை ஒன்று அடகுவைக்க வந்துள்ளனர். அப்போது தர்மாராமன் சேட்டு சந்தேகத்தின் காரணமாக நகை அடகு வைக்க மறுத்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சென்றதாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து மாலை மீண்டும் ஆத்திரத்துடன் கடைக்கு குடிபோதையில் வந்த சிலம்பரசன் கடைக்குள் புகுந்து தர்மாராமனை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்த தர்மாராமனை மீட்டு அக்கம்பக்கத்தினர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த படாளம் காவல்துறையினர் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சியின் ஆதாரத்தை வைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் அதிக பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இதுபோன்ற துணிகர சம்பவம் நடந்திருப்பது பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.