Categories: தமிழகம்

நகைக்கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு : கைதான நபருக்கு கையில் மாவுக்கட்டு.. பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக விளக்கம்!!

நகைக் கடை உரிமையாளரை வெட்டும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில், வெட்டியதாக கைதான நபர் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக மாவு கட்டு போடப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மாமண்டூர் ஜிஎஸ்டி சாலையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கேசாராம் என்பவரது மகன் தர்மாராம் செட் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக நகை வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை காலை வழக்கம் போல் தர்மாராம் சேட் கடையை திறந்துள்ளார். அப்போது, வடபாதி கிராமம் புதிய காலனி பகுதியைச் சேர்ந்த சாம்மூர்த்தி என்பவரின் மகன் சிலம்பரசன், நகை ஒன்று அடகுவைக்க வந்துள்ளார்.அப்போது தர்மாராம் சேட்டுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் நகையை அடகு வாங்க மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சிலம்பரசன் அவருடன் கடுமையான வாக்குவாதம் செய்ததோடு எங்களிடம் நகை வாங்க மறுத்த உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என எச்சரித்து விட்டு சென்றுள்ளனர்.அதனைத் தொடர்ந்து அன்று மாலை குடிபோதையில் கடைக்கு வந்த சிலம்பரசன் தர்மாராம் சேட்டை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியுள்ளனர். இதில், தலையில் பலத்த காயமடைந்த தர்மாராம் சேட்டை மீட்ட அக்கம் பக்கத்தினர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கடந்த 3 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய படாளம் காவல் துறையினர் தலைமறைவாக இருந்த சிலம்பரசனை தேடி வந்தனர். இதனையடுத்து நேற்று செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த சிலம்பரசனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணைக்காக செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் காவல் நிலையத்திற்கு சிலம்பரசனை அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது சிலம்பரசன் பாத்ரூமில் வழுக்கி விழுந்துள்ளார். இதையடுத்து சிலம்பரசனை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவரது கைக்கு மாவு கட்டு போடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

AddThis Website Tools
KavinKumar

Recent Posts

இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…

3 hours ago

பயங்கரவாதிகளை தேடி தேடி ஒழிக்க வேண்டும் : துணை முதலமைச்சர் பரபரப்பு பேச்சு..!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…

3 hours ago

கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?

புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…

4 hours ago

கட்டுனா மாமனை மட்டும் தான் கட்டுவேன் : ஒரே மேடையில் இரு பெண்களுடன் இளைஞர் திருமணம்..(வீடியோ)!

தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…

5 hours ago

அய்யோ; இது சுத்த பொய்- பதறிப்போய் ஓடி வந்த அஜித்தின் மேனேஜர்? அப்படி என்ன நடந்திருக்கும்?

அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…

5 hours ago

திருமாவுடன் கைக்கோர்க்கும் ராமதாஸ்.. 14 ஆண்டுகளுக்கு பின் மனமாற்றம் : ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்!

தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…

5 hours ago