இருளர்கள் மற்றும் திருநங்கைகளுக்காக கட்டப்பட்டு முதல்வரின் திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் வீடுகளில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், கொடூர் ஊராட்சிக்குட்பட்ட ஆட்சி விளாகம் பகுதியில் இருளர்களுக்கு மத்திய, மாநில அரசு நிதியின் கீழ், 30 வீடுகளும், தமிழ்நாடு அரசு மற்றும் மொபிஸ் இந்தியா பவுண்டேஷன் சார்பாக திருநங்கைகளுக்கு 50 வீடுகளும் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் மற்றும் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர். பனையூர் பாபு, திமுக மாவட்ட செயலாளர், கா. சுந்தர் MLA அவர்களின் முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் மேற்கொண்டு வந்தனர்.
இதன் மதிப்பீடு சுமார் 5 கோடியே 24 லட்சத்தி 96 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 80 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதனை மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் ஆய்வு செய்து தமிழக முதல்வர் முன்னிலையில் திறப்பு விழாவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
ஆனால், இந்த வீடுகள் தரமற்றதாகவும், கை வைத்தாலே பெயர்ந்து வருவதை பார்த்து வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பயனாளிகள் குற்றம் சாட்டினர். மீண்டும் வீடுகள் சரிபார்த்து பயனாளிகளுக்கு அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். ஆனால் சரிபார்ப்பு செய்யப்பட்டும் வீடுகள் பெயர்ந்து கொட்டுகிறது.
தரமற்ற கட்டுமான பொருட்களை பயன்படுத்தியும் கட்டப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு முதல்வர் அவர்கள் குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு ஒப்பந்ததாரர்கள் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டின் பயனாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.