செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இளைஞர் ஒருவர் ஓடஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பெருமாள் கோவிலை அடுத்துள்ள தர்காஸ் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். இவர் நேற்றிரவு 10 மணியளவில் கொண்டமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, செல்லும் வழியில் ஒரு பைக்கில் வந்த 3 பேர், மனோகரனின் வாகனத்தை மறித்து மடக்கியுள்ளனர்.
பிறகு, தங்களிடம் இருந்த பயங்கரமான ஆயுதங்களை வைத்து மனோகரனை அரிவாளால் வெட்ட முயற்சித்துள்ளனர். இதனால், தனது இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு மனோகரன் தப்பி ஓடினார். பின்னர், பள்ளிக்கூட தெருவில் அமைந்துள்ள ஒரு வீட்டின் பின்புறத்தில் பதுங்கியிருந்தார். இதனைக் கண்டுபிடித்த அந்த கும்பல், மனோகரனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தக் கொலை சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற போலீசார், உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் காவலருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் கொலை செய்யப்பட்டாரா? தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.