சென்னை : ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுமியை அழைத்து சென்று குடும்பம் நடத்திய நபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
சென்னை பெரம்பூர் மடுமா நகர் பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கடந்த ஏப்ரல் மாதம் அளித்திருந்தார். அதில் தனது 17 வயது மகளை வேலூர் மாவட்டம் சதுப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் ( எ) ராஜேஷ் (30) என்ற நபர் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
அதன் பேரில் போலீசார் சிறுமியை மீட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். அப்பொழுது ராஜேஷ் தலைமறைவாகி விட்டார்.
இந்நிலையில், தொடர்ந்து அவரை தேடி வந்த நிலையில் வேலூர் மாவட்டம் சதுப்பேரி கிராமத்தில் வைத்து அவரை பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.