சென்னையில் 2வது நாளாக ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்திக்குள்ளாகினர்.
ஆவின் பால் நிறுவனம் மூலம் சென்னையில் மட்டும் 14 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த சில நாட்களாக ஆவின் பால் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளதால் சென்னையில் உள்ள மாதவரம் மத்தியபால் பண்ணை, சோழிங்கநல்லூர், அம்பத்தூர் பால் பண்ணைகளுக்கு பால் வரத்து குறைந்துள்ளது. இதனால், ஆவின் பால் விநியோகமும் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அம்பத்தூர் ஆவின் பண்ணைக்கு வரவேண்டிய பால் தாமதமாக வந்ததால், இரண்டாவது நாளாக இன்றும் பால் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது பாதிப்பு சரி செய்யப்பட்டுவிட்டு, சரியான முறையில் பால் விநியோகிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.