சென்னையை அடுத்துள்ள தாம்பரத்தில் உள்ள வழக்கறிஞரின் வீட்டின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு தாம்பரம் மீனாம்பாள் தெருவைச் சேர்ந்த வழக்கறிஞர் தியாகராஜன். இவருக்கு பிரியா என்ற மனைவியும், விஷால் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில், நேற்று மாலை 3 பேரும் வீட்டில் இருந்த நிலையில், வீட்டில் இருந்த கண்ணாடி உடைந்து விழுந்துள்ளது. சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்த போது, துப்பாக்கி குண்டு பாய்ந்து கண்ணாடி உடைந்து விழுந்தது தெரிய வந்துள்ளது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர் தியாகராஜன், உடனே தாம்பரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். பின்னர் தடய அறிவியல் நிபுணர்களையும் வரவழைத்து ஆய்வு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து, துப்பாக்கி குண்டை கைப்பற்றிய போலீசார், துப்பாக்கிக் குண்டு எந்த வகையைச் சேர்ந்தது? என்பது குறித்தும், குண்டு எங்கிருந்து வந்தது? என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துப்பாக்கிக் குண்டு ஏகே 47 ரகத் துப்பாக்கி குண்டாக இருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.