சென்னையில் சிறுமியை நாய் கடித்த சம்பவம் அடங்குவதற்குள் மற்றொரு சம்பவம் அரங்கேறியிருப்பது பொதுமக்களிடையே கோபத்தை உண்டாக்கியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் காவலாளியின் 5 வயது மகள் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த புகழேந்தி என்பவரின் வளர்ப்பு நாய்கள் சிறுமியை கடித்துக் குதறியது. சிறுமியின் அலறல் சத்தத்தைக் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து நாயை விரட்டிவிட்டு சிறுமியை மீட்டனர்.
நாய்கள் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்த சிறுமி ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னை ஆலந்தூர் பகுதியில் உறவினர் வீட்டிற்கு வந்த சிறுவன் ஒருவனை வளர்ப்பு நாய் கடித்த சம்பவம் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் படிக்க: உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து… ஒரு நாளைக்கு 80 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே … சபரிமலை ஐயப்பன் கோவிலில் புதிய கட்டுப்பாடு..!!!
வேளச்சேரியைச் சேர்ந்த அஸ்வந்த் என்று சிறுவன் கோடை விடுமுறைக்காக, ஆலந்தூர் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் இருக்கும் தனது அத்தை வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இருந்த வளர்ப்பு நாய் சிறுவன் அஸ்வந்தை கடித்த நிலையில், மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
அந்த நாய் ஏற்கனவே ஒரு சிறுவனை கடித்து ரூ.17 ஆயிரம் வரை செலவு செய்துள்ளதாகவும், தற்போது தங்கள் குடும்பத்தில் உள்ள மற்றொரு சிறுவனை கடித்திருப்பதாக பாதிக்கப்பட்ட சிறுவனின் பாட்டி வேதனை தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற நாய்களினால் தெருக்களில் நடமாட முடியவில்லை என்றும், தயவு செய்து நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று அவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.