சென்னை : பூந்தமல்லி அருகே குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
பூந்தமல்லி ராமானுஜர் கூடம் தெருவில் தனியார் மகளிர் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான பெண்கள் தங்கியிருந்து கல்லூரி மற்றும் பணிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 15ம் தேதி அந்த மகளிர் விடுதியின் அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் இருந்து பச்சிளம் குழந்தை ஒன்றை அதே பகுதியைச் சேர்ந்த யுவராணி என்பவர் மீட்டு எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதித்தார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பூந்தமல்லி போலீசா விசாரித்து வருகின்றனர். இதனிடையே, விடுதியில் தங்கியிருந்த பெண்ணும், அவரது காதலனும் குழந்தையை குப்பைத் தொட்டியில் தாங்கள் தான் வீசியதாகக் கூறி பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றனர்.
இவர்களின் டிஎன்ஏ குழந்தையின் டிஎன்ஏவுடன் ஒத்துப்போகிறதா..? என்று பரிசோதனையும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து காதல் ஜோடி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.