சென்னை அருகே குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரத்தை தீயணைப்பு வீரர்கள் போராடி அகற்றினர்.
சென்னை போரூர் மங்களா நகர் பதினோராவது தெருவை சேர்ந்தவர் கார்த்திக் – ஆனந்தி தம்பதியினர். இவர்களது ஒன்றரை வயது மகன் கிருத்திக் வழக்கமாக வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, வீட்டின் சமையலறையில் இருந்த பாத்திரம் எதிர்பாராத விதமாக, விளையாடும் போது குழந்தையின் தலையில் மாட்டிக் கொண்டது.
நீண்ட நேரம் போராடியும் குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரத்தை எடுக்க முடியாமல் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தவித்து வந்துள்ளனர். தலையில் சிக்கிய பாத்திரத்தால் வலி பொறுக்காமல் குழந்தையும் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் அழுது கொண்டு இருந்துள்ளது.
பின்னர், மதுரவாயல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கோமதி சங்கர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் குழந்தையின் தலையில் சிக்கியிருந்த பாத்திரத்தை நவீன கத்தரி கொண்டு, இலாவகமாக குழந்தைக்கு எந்த ஒரு காயமும் இன்றி அகற்றினர். குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரத்தை அகற்றியதும் குழந்தையின் பெற்றோர்கள் நிம்மதியடைந்தனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.