சென்னை : ராமாபுரம் அருகே மெட்ரோ பணிகளின் போது மேம்பால பில்லர் சாய்ந்து பேருந்து மற்றும் லாரி மீது விழுந்த விபத்தில், அதில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டசமாக உயிர்தப்பினர்.
இன்று காலை குன்றத்தூரில் இருந்து அரசு பேருந்து TN01 N5450 என்ற அரசு பேருந்து 8 அரசு பேருந்து பணியாளர்களை ஆலந்தூர் அழைத்துச் சென்று கொண்டிருந்தது. அப்போது ராமபுரம் பகுதியில் மெட்ரோ மேம்பால பணி நடந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக கிரேனில் இருந்த பில்லர் தவறி, சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து மற்றும் லாரி மீது விழுந்தது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனர் அய்யாதுரை (52), பேருந்து நடத்துனர் பூபாலன் (45), லாரி டிரைவர் ரப்சித் குமார் ஆகியோருக்கு கை கால்களில் காயம் ஏற்பட்டு போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.