சென்னை கார் ரேஸ் எனக்காக நடத்தப்படுகிறதா? வலைதள விமர்சனத்துக்கு நடிகை நிவேதா பெத்துராஜ் பதிலடி!
தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து படம் மூலம் அறிமுகமானவர் மதுரையை சேர்ந்த நடிகை நிவேதா பெத்துராஜ். மதுரை பிறப்பிடம் என்றாலும் குடும்பம் மொத்தமும் துபாய்தான்.
தொடர்ந்து டிக்டிக்டிக், பொதுவாக என் மனசு தங்கம், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் உட்பட சில தமிழ் படங்களிலும், வைகுண்டபுரம் உள்ளிட்ட சில தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நிவேதா பற்றி செய்திகள் இணையத்தில் அதிகமாக வைரலானது. காரணம் பிரபல யூடியூபர் ஒருவர் நிவேதா பெத்துராஜையும், நடிகரும் அரசியல் பிரமுகருமான ஒரு நடிகருடன் தொடர்புப்படுத்தி பேசியிருந்தார்.
இந்த செய்திகள் இணையத்தில் றெக்கை கட்டி பறந்தன. இது குறித்து நிவேதா பெத்துராஜ் விளக்கம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், “சமீபகாலமாக எனக்கு பணம் தாராளமாக செலவிடப்படுவதாக தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதைப் பற்றிப் பேசுபவர்கள், ஒரு பெண்ணின் வாழ்க்கையை மனமில்லாமல் கெடுக்கும் முன், தாங்கள் பெறும் தகவல்களைச் சரிபார்ப்பதற்குச் சில மனிதாபிமானம் இருக்கும் என்று நினைத்ததால் நான் அமைதியாக இருந்தேன்.
நானும் எனது குடும்பத்தினரும் சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தோம். இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பும் முன் யோசியுங்கள். நான் மிகவும் கண்ணியமான குடும்பத்தில் இருந்து வந்தவள். நான் 16 வயதிலிருந்தே பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்கிறேன். எனது குடும்பம் இன்னும் துபாயில் வசிக்கிறது. நாங்கள் 20 வருடங்களுக்கும் மேலாக துபாயில் இருக்கிறோம். திரையுலகில் கூட, நான் இதுவரை எந்த தயாரிப்பாளரிடமோ, இயக்குநரையோ, ஹீரோவிடம் நடிக்கவோ, பட வாய்ப்புகளை தரும்படியோ கேட்டதில்லை. நான் 20 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன். நான் எப்போதும் வேலை அல்லது பணத்திற்காக பேராசை கொள்ளமாட்டேன்.
என்னைப் பற்றி இதுவரை பேசப்பட்ட எந்தத் தகவலும் உண்மை இல்லை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். 2002 ஆம் ஆண்டு முதல் துபாயில் வாடகை வீட்டில் வசிக்கிறோம். மேலும், 2013 ஆம் ஆண்டு முதல் ரேசிங்கே எனது விருப்பமாக இருந்து வருகிறது. உண்மையில் சென்னையில் நடத்தப்படும் ரேசிங் பற்றி எனக்கு தெரியாது. நான் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்கிறேன். வாழ்க்கையில் பல போராட்டங்களைச் சந்தித்த பிறகு, நான் இறுதியாக மன ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் ஒரு நல்ல இடத்தில் இருக்கிறேன். நான் தொடர்ந்து கண்ணியமான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். உங்கள் குடும்பத்தில் உள்ள மற்ற பெண்களைப் போலவே.
நான் இதை சட்டரீதியாக எடுத்துக் கொள்ளவில்லை, ஏனென்றால் பத்திரிகையில் இன்னும் கொஞ்சம் மனிதாபிமானம் உள்ளது. அவர்கள் என்னை இப்படி அவதூறு செய்யமாட்டார்கள் என்று நான் இன்னும் நம்புகிறேன். ஒரு குடும்பத்தின் நற்பெயரைக் கெடுக்கும் முன், நீங்கள் பெறும் தகவல்களைச் சரிபார்த்து எங்கள் குடும்பத்தை இனி எந்தக் காயங்களுக்கும் ஆளாக்க வேண்டாம் என்று பத்திரிகையாளர்களைக் கேட்டுக் கொள்கிறேன். எனக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில்…
தோல்வி இயக்குனருடன் கூட்டணியா? “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி “ஏஸ்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும்…
அதிரிபுதிரி ஹிட்… “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த “எம்புரான்” திரைப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான…
தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
This website uses cookies.