Categories: தமிழகம்

தனியாக செல்லும் பெண்கள் தான் டார்கெட்.. YouTube-ஐ பார்த்து செயின் பறிப்பில் ஈடுபட்ட என்ஜினியர்..!

ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் பணத்தை இழந்த சிவில் இன்ஜினியர் கடனை அடைக்க செயின் பறிப்பில் ஈடுபட்டு போலீசில் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அவர் youtubeபை பார்த்து தான் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளது மேலும், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தாம்பரத்தை அடுத்த சோலையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜபுரம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் சீதாலட்சுமி, (70) இவரிடம் சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் இரண்டு சவரன் தங்க செயினை பறித்து சென்றார்.

அதேபோல, கிழக்கு தாம்பரம் ஆஞ்சநேயர் தெருவில் நித்தியா சுபா (49) என்பவரிடம் 5 சவரன் தங்கச் செயினை பறித்து சென்றார். இந்த இரண்டு சம்பவங்களும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அதை குற்றவாளி செயின் உடன் தப்பி செல்வதும் பதிவாகி இருந்தது.

மேலும் படிக்க: என்னடா சொல்றீங்க.. 200 மி.லி தாய்ப்பால் 700 ரூபாய்.. மெடிக்கல் ஷாப்பிற்கு அதிரடியாக சீல் வைத்த அதிகாரிகள்..!

இதை அடுத்து, குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கொள்ளையனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர். அதில், செயினை பறித்து விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிய இளைஞர் எங்கெல்லாம் சென்றார் என்று பார்த்தபோது அவர் காமராஜபுரம், மப்பேடு, அகரம், பெருங்களத்தூர், முடிச்சூர், படப்பை என சென்று இறுதியாக மடிப்பாக்கம் பகுதியில் ஒரு வீட்டிற்குச் சென்றது தெரியவந்தது.

இதனை அடுத்து, அந்த வீட்டிற்கு சென்ற தனிப்படை போலீசார் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அந்த நபர் கோவில்பட்டியைச் சேர்ந்த அருணாச்சலம் என்பதும் வயது 27 எனவும் அவர் மடிப்பாக்கம் ராம்நகர் பகுதியில் குடும்பத்துடன் சொந்த வீட்டில் தற்போது வசித்து வருவதும் தெரிய வந்தது.

மேலும் படிக்க: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறது… புதிய அறிவிப்பால் மகிழ்ச்சியில் மாணவர்கள்..!

தொடர்ந்து, நடைபெற்ற விசாரணையில் சிவில் இன்ஜினியரிங் முடித்து வேலை கிடைக்காத காரணத்தால் ஆன்லைன் வர்த்தகத்தில் அருணாச்சலம் பணம் செலுத்தியுள்ளார். அதில், 2 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், அவரது தங்கையின் 10 சவரன் நகைகளை வங்கியில் வைத்து அந்த பணம் மற்றும் கடனாக பெற்ற பணத்தில் மீண்டும் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு சுமார் 14 லட்சம் வரை தற்போது இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இதன்பின்னர் ராபிடோவில் பைஓட்டி வந்து youtube வீடியோக்களை பார்த்து செயின் பறிப்பில் ஈடுபடலாம் என முடிவு செய்ததாக அவர் தெரிவித்திருந்தார். மேலும், சாலையில் தனியாக செல்லும் பெண்களை நோட்டமிட்டு சீதாலட்சுமி, நித்திய சுபா ஆகிய இருவரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், போலீஸில் சிக்காமல் இருக்க வாகன பதிவு எண்ணை மாற்றி பயன்படுத்தி வந்துள்ளார். வரும் பத்தாம் தேதி இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, இவரை தாம்பரம் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Poorni

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

14 hours ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

14 hours ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

16 hours ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

16 hours ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

16 hours ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

16 hours ago

This website uses cookies.