சென்னையில் முன்விரோதம் காரணமாக கொலை செய்யும் நோக்கில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த திமுக பிரமுகர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் தரப்பில் கூறியதாவது :- சென்னை பாரிமுனை அருகே இருக்கும் டீக்கடை ஒன்றின் அருகே ஆயுதங்களுடன் கும்பல் ஒன்று பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அதில், 6 பேர் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதைக் கண்டுபிடித்து காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் சென்னை ஓட்டேரி மங்களபுரத்தைச் சேர்ந்த யஸ்வந்த்ராயன் (25), நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த ஜெய்பிரதாப் (18), அயனாவரம் கார்த்திகேயன் (20), பெரம்பூர் பிரான்சிஸ் (25), அதேபகுதி கார்த்திக் (25), மங்களாபுரம் கோகுல்நாத் (20) என்பது தெரியவந்தது. பின்னர், அவர்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்கள், 4 அரிவாள்களைப் பறிமுதல் செய்தனர்.
மேலும் படிக்க: இரவு நேரத்தில் வெக்கை.. காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய இளம்பெண் பலாத்காரம் : சென்னையில் ஷாக்!!!
விசாரணையில் யஸ்வந்த்ராயன் மற்றும் பிரான்சிஸ் ஆகியோர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும், இவர்கள் இருவருக்கும் சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த சரண் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக, சரணை கொலை செய்யும் நோக்கில், வழக்கு ஒன்றிற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராக வருவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, அவரை கொலை செய்ய யஷ்வந்த் தனது கூட்டாளிகளுடன் பதுங்கியிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட யஸ்வந்த்ராயன் ஓட்டேரிபகுதி திமுக பிரமுகராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார்.இந்த செய்தி திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியைக்…
பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…
திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
This website uses cookies.