சென்னை : சென்னையில் குடிபோதையில் இளம்பெண் ஒருவர் போலீசாரிடம் அலப்பறை செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை மாநகர போலீசார் வழக்கம் போல நேற்றிரவு வாகன ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாலையின் ஓரத்தில் அசாதாரணமாக இருந்த இளம்பெண் ஒருவர் தனது பைக்கை நிறுத்திக் கொண்டு, அழுது கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்ட போலீசார் அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் தலைக்கேறிய போதையில் இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. பின்னர், அவரை பக்குவமாக அழைத்து வந்து, மது அருந்துபவர்களை பரிசோதிக்கும் கருவியில் ஊதுமாறு கூறினர். ஆனால், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஒரு கட்டத்தில், எந்தவித அபராதமும் விதிக்காமல் உங்களை விட்டுவிடுகிறோம், இந்த கருவியில் பலூன் ஊதுவது போன்று ஊதுமாறு கூறியுள்ளனர். அதனை நம்பிய அந்தப் பெண்ணும் ஊதியதில், அவர் தலைக்கேறிய போதையில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, வாகனத்தை விட்டுவிட்டு வீட்டுக்கு செல்லுமாறும், காலையில் வந்து வாகனத்தை எடுத்துக் கொள்ளுமாறு போலீசார் தெரிவித்தனர்.
ஆனால், இதனை ஏற்க மறுத்த அந்த இளம்பெண்ணோ, “ஆம், நான் ஓசியில் தான் குடிக்கப் போகிறேன். தினமும் இந்த வழியில்தான் குடிக்கச் செல்கிறேன். இன்னைக்கு மட்டும் எதற்கு பிடிக்கறீர்கள்..? என்னிடம் காசு ஏதுமில்லை. ஊதினால் விட்டு விடுகிறேன் என சொன்னீர்கள் தானே, இப்ப எதுக்கு ஃபைன் போடுறீங்க..? என்று கூறி அலப்பறை செய்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.