சென்னையில் பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 28 சவரன் நகையும், 5 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொளத்தூர் ராஜமங்கலம் செந்தில் நகரில் வசித்து வருபவர் ரூப் கிருஷ்ணன் (44). இவர் சிறுசேரியில் உள்ள தனியார் கம்பெனியில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் கடந்த 26ம் தேதி வியாழக்கிழமை அன்று வீட்டை பூட்டிக் கொண்டு, கேரளாவில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு, அப்படியே கோவில் சுற்றுலாவிற்கு மதுரை, மூணாறு ஆகிய இடங்களுக்கு சென்றுள்ளனர்.
இதனை அடுத்து அவரது உறவினர் ஒருவர் வீடு திறந்து கிடக்கிறது என்று அவரிடம் தொலைபேசியில் கூறவே, உடனே அனைவரும் புறப்பட்டு சென்னை கொளத்தூரில் வீட்டிற்கு விரைந்து வந்தனர். இன்று வீட்டிற்கு வந்து பொறியாளர் கிருஷ்ணா, வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 28 சவரன் தங்க நகைகளும், 5,000 ரூபாய் பணமும் திருடு போயிருந்தது தெரிய வந்தது.
உடனே இது குறித்து அவர் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். இதுபற்றி கைரேகை நிபுணர்களுக்கு விபரம் தெரிவிக்கப்பட்டு மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
இது குறித்து ராஜமங்கலம் போலீசார் சிசிடிவி கேமராக்களில் பதிவுகளை வைத்து மர்ம நபர் ஒருவர் திருடப்பட்ட வீட்டில் அருகே சாலையில் சாவகாசமாக நடந்து சென்றது பதிவாகியுள்ளது. அந்த கண்காணிப்பு கேமரா அடிப்படையில் அந்த காட்சிகளை வைத்து போலீசார் அந்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.