லியோ படத்தை வெளியிட தியேட்டர்கள் மறுப்பு… அடுத்தடுத்து சிக்கலில் சிக்கி தவிக்கும் லியோ.. தயாரிப்பாளர் காரணமா..?
லியோ திரைப்படத்தை வெளியிட சில முக்கிய திரையரங்குகள் மறுப்பு தெரிவித்ததால் நடிகர் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதிக்கு திரைக்கு வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். லியோ படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
லியோ படம் வெளியீட்டு தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து பல்வேறு தடங்கல்களை சந்தித்து வருகிறது. டிரெய்லர் வெளியீட்டின் போது ரோகிணி தியேட்டரில் இருக்கைகளை ரசிகர்கள் உடைத்து சேதப்படுத்தியது, இசை வெளியீட்டு விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது என பல்வேறு தடைகள் ஏற்பட்டன.
அதுமட்டுமில்லாமல், லியோ படத்திற்கு அதிகாலை 4 மற்றும் 7 மணிக்கு சிறப்பு காட்சிகளை திரையிட அனுமதிக்க வேண்டும் என்ற படக்குழுவின் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தது. படம் வெளியாகும் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரையிலான 5 நாட்களுக்கு 5 காட்சிகளை வெளியிட மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
இதனால், லியோ படத்தை வெளியிடுவதில் அரசியல் தலையீடு இருப்பதாக விஜய் ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் லியோ படத்திற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் உள்ள சில முக்கிய திரையரங்குகள் லியோ படத்தை வெளியிட மறுப்பு தெரிவித்திருப்பது ரசிகர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதாவது, தயாரிப்பாளர் லலித்குமாருடன் ஏற்பட்ட பிரச்சனையால் AGS,ரோகிணி உள்ளிட்ட திரையரங்குகள் லியோ படத்தை வெளியிட மறுப்பு தெரிவித்து வருகின்றன. படத்தின் முதல் வார வசூலில் 80% தொகையை தயாரிப்பாளர் கேட்பதாகவும், இதற்கு தியேட்டர்கள் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பதால், இருதரப்பினரிடையே உடன்பாடு எட்டப்படவில்லை என்று திரையரங்குகள் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும், இனி தியேட்டர்களில் டிரெய்லர்களை வெளியிட மாட்டோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். லியே படம் வெளியிட இன்னும் ஒரு நாளே இருக்கும் சூழலில், லியோ படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின்னர், அறிவிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் சிவக்குமார் ஜெயபாலன். இதையும்…
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
This website uses cookies.