2023ம் ஆண்டின் முதல் வாரத்தில் தங்கத்தின் விலை உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்து விற்பனையாகி வருகிறது.
கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சத்தை தொட்டும் விற்பனையாகி, ஆபரண பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து தங்கத்திற்கான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 21ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.41 ஆயிரத்தை நெருங்கும் வகையில் சென்றது.
2022ம் ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31ம் தேதி சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 41 ஆயிரத்தை தாண்டியது. இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில், இன்றும் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (வியாழக்கிழமை) கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து ரூ.5,228ஆகவும், சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ரூ.41 ஆயிரத்து 824ஆக ஏற்றம் கண்டுள்ளது.
வெள்ளி விலையில் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று ஒரு ரூபாய் குறைந்து, ரூ.74.00ஆக சரிந்துள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 சரிந்து, ரூ.74,000 ஆக குறைந்துள்ளது.
புத்தாண்டு பிறந்த நிலையில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டிருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…
சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
This website uses cookies.