சென்னை ; பழவேற்காடு அருகே பலத்த காற்றுடன் திடீரென பெய்த மழையில் சென்னை மாநகர அரசு பேருந்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டார பகுதியில் திடீரென பலத்த புழுதி காற்றுடன் நேற்று மழை பெய்தது. அப்போது, பழவேற்காட்டில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்ற 558 B என்ற சென்னை மாநகர அரசு பேருந்து மேற்கூரை காற்றின் வேகத்தில் பெயர்ந்து விழுந்தது. இதில், பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.
பின்னர், ஓட்டுநர் கந்தன் மற்றும் நடத்துனர் பன்னீர் ஆகிய இருவரும் பயணிகளை வேறு பேருந்தில் அனுப்பி வைத்தனர். பாடியநல்லூர் பணிமனையில் இருந்து இயக்கப்பட்ட பேருந்தின் மேற்கூரை பழவேற்காடு அருகே காற்றின் வேகத்தில் தனியாக பெயர்ந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவ்வழியாக வேறு வாகனங்கள் ஏதும் வராததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.