சென்னை ; பழவேற்காடு அருகே பலத்த காற்றுடன் திடீரென பெய்த மழையில் சென்னை மாநகர அரசு பேருந்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டார பகுதியில் திடீரென பலத்த புழுதி காற்றுடன் நேற்று மழை பெய்தது. அப்போது, பழவேற்காட்டில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்ற 558 B என்ற சென்னை மாநகர அரசு பேருந்து மேற்கூரை காற்றின் வேகத்தில் பெயர்ந்து விழுந்தது. இதில், பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.
பின்னர், ஓட்டுநர் கந்தன் மற்றும் நடத்துனர் பன்னீர் ஆகிய இருவரும் பயணிகளை வேறு பேருந்தில் அனுப்பி வைத்தனர். பாடியநல்லூர் பணிமனையில் இருந்து இயக்கப்பட்ட பேருந்தின் மேற்கூரை பழவேற்காடு அருகே காற்றின் வேகத்தில் தனியாக பெயர்ந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவ்வழியாக வேறு வாகனங்கள் ஏதும் வராததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
தமிழகத்தில் சில கல்வி நிறுவனங்கள் சாதி பெயர்களில் செயல்பட்டு வருகிறது. அந்த கல்வி நிறுவனம் பயன்படுத்தும், வாகனம், கல்வி வளாகத்தில்…
ஜூனியர் நடிகர்களின் வேதனை ஒரு திரைப்படம் என்று எடுத்துக்கொண்டால் அதில் பல ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் இருப்பார்கள். அவர்கள் இடம்பெறும் காட்சிகள்…
கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பாராமெடிக்கல் சயின்ஸ்…
சேலம் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதையும் படியுங்க: ஆட்சியில்…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இத்திரைப்படம்…
டாப் நடிகை தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா தற்போது தென் இந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.…
This website uses cookies.