சென்னை : நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடத்த வேண்டும் என்றும், இல்லையெனில் தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக நீதிமன்றங்களில் ஆன்லைன் மூலம் விசாரணை நடைபெற்று வரக்கூடிய காரணத்தினால், வழக்கறிஞர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், சென்னை உயநீதிமன்ற வளாகத்தின் முன்பு மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர்.
அப்போது, கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கு சென்னை உயநீதிமன்ற அனுமதி வழங்கியுள்ளது. 1 முதல் 12 ஆம் வகுப்புவரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. டாஸ்மாக், மருத்துவமனைகள், பள்ளி மற்றும் கல்லூரிகள் இயக்கும் போது, நீதிமன்றங்களில் மட்டும் நேரடி விசாரணைக்கு அனுமதி மறுப்பது ஏன்…? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நீதிமன்றங்களில் நேரடி விசாரணை மறுக்கப்பட்டதாலும், 2020 முதல் 2022 வரை நீதிமன்றங்கள் மூடியதாலும் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் பாதிக்கபட்ட வழக்கறினர்களுக்கு தமிழக அரசும், பார் கவுன்சிலும் 1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டுமென்றும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நேரடி விசாரணை நடத்த வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.