சென்னை : சென்னை ஐஐடி நிறுவனத்தில் பணி நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக டிஜிபி சைலேந்திர பாபுவிடம் தலித் ஆக்சன் கமிட்டியின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இயங்கி வரும் உயர் கல்வி நிறுவனமான ஐஐடியில், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு வேலைவாய்ப்பில் வழங்க வேண்டிய 22.5 சதவிகிதப்படி வழங்காமல் வெறும் 2.5 சதவிகிதம் மட்டுமே வழங்கப்பட்டு பேராசிரியர், உதவி பேராசிரியர் பணி இடங்களை நிரப்புவதில் முறைகேடு நடைபெறுவதாக தலித் ஆக்சன் கமிட்டி எனும் அமைப்பின் பொதுச்செயலாளர் A.M.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், உயர் சாதியினருக்கே பணி வழங்கப்படுவதாகவும், இது குறித்து பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றும் அவர் புகார் தெரிவித்துள்ளார். எனவே, சென்னை ஐஐடி பணி நியமனம் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை வழங்கக்கோரி விண்ணப்பித்துள்ளார்.
இது தொடர்பாக, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொலி மூலம் நடைபெற்ற விசாரணையில், ஐஐடி பதிவாளர் ஜானே பிரசாத், மத்திய தகவல் ஆணையர் அமித்தா பாண்டே, தலித் அமைப்பின் பிரதிநிதி A.M.ராஜா ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, சென்னை ஐஐடி நிறுவனம் விரைவில் பணி நியமனம் குறித்து தகவல்களை அளிக்க மத்திய தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை ஐஐடி யில் பணி நியமனத்தில் நடைபெற்றுள்ள முறைகேட்டை விசாரிக்க வேண்டும் என்றும், டிஜிபி சைலேந்திரபாபுவிடம் புகார் மனு கொடுத்திருப்பதாகவும் A.M.ராஜா தெரிவித்தார்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.