சென்னை : சென்னையில் இரு குழந்தைகள் மற்றும் மனைவியை ஐடி ஊழியர் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் வெங்கடேஷ்வரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (40). இவர், தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு காயத்ரி (39) என்ற மனைவியும், நித்யஸ்ரீ (13) என்ற மகளும், அரி கிருஷ்ணன் (9) என்ற மகனும் இருந்தனர். இவர்கள், நேற்றிரவு வழக்கம் போல தங்களின் வீட்டில் தூங்கச் சென்றுள்ளனர்.
இன்று காலையில் வெகுநேரமாகியும் அவர்களின் கதவு திறக்கப்படாமல் இருந்து வந்துள்ளது. வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை தட்டியுள்ளனர். ஆனால், யாரும் கதவை திறக்காததால், அவர்கள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளனர்.
அப்போது, பிரகாஷ் உள்பட நால்வரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ந்து போகினர். பின்னர், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மரம் அறுக்கும் ரம்பத்தால் அவர்களின் கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. வீடு முழுவதும் ரத்தம் வழிந்தோடி காணப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், மனைவி, மகன், மகளின் கழுத்தை எலக்ட்ரிக் ரம்பத்தால் கொடூரமாக அறுத்து கொலை செய்து விட்டு, பிறகு அதே ரம்பத்தினால் பிரகாசும் தனது கழுத்தையும் அறுத்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மேலும், வீட்டில் அவர் கைப்பட எழுதிய கடிதமும் போலீசாரிடம் சிக்கியது. அதில், அவர் கடன் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர்.
தொடர்ந்து, அவரது செல்போனை ஆய்வு செய்ததில், கடந்த 9ம் தேதி தான் ஆன்லைனில் எலக்ட்ரிக் ரம்பத்தை பிரகாஷ் ஆர்டர் போட்டதும், அந்த ரம்பத்தின் மூலம் தனது குடும்பத்தையே சிதைத்ததும் தெரிய வந்துள்ளது. மேலும், அவரது செல்போனில் அழைப்புகளை ஆராய்ந்து, தற்கொலைக்கு யாரேனும் தூண்டினார்களா..? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.