சென்னையில் குடிபோதைக்கு அடிமையாகி தொல்லை செய்து வந்த மகனை தந்தையும், சகோதரனும் சேர்ந்து கொலை செய்து எரித்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மதுரவாயல் வாநகரம் மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஆசைமணி. இவருக்கு வயது 60. இவருக்கு அஜய் மற்றும் விஜய் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர்களில் விஜய்க்கு 7 ஆண்டுகளுக்கு முன்னால் திருமணம் நடந்து ஒரே மாதத்தில் மனைவியையும் பிரிந்துள்ளார். இதனால் தனது தந்தை மற்றும் சகோதரனுடன் வீட்டில் வசித்து வரும் விஜய் கஞ்சா மற்றும் மது போதைக்கு தீவிரமாக அடிமையாக உள்ளார். இதனால் தினமும் வீட்டில் பிரச்சனை செய்து வந்தார் என்று கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த தினத்தன்று விஜய் கடுமையான மதுபோதையில் வீட்டுக்கு வந்து தன் தந்தையுடனும், சகோதரனுடனும் சண்டை போட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த ஆசைமணி மற்றும் விஜயின் சகோதரர் இணைந்து கத்தியால் குத்தி கொலை செய்து பின் அவரின் உடலை வீட்டிற்கு பின்னால் உள்ள இடத்தில் எரித்துள்ளனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கொடுத்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விஜயின் தந்தை மற்றும் சகோதரனை கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.