சென்னையில் குடிபோதைக்கு அடிமையாகி தொல்லை செய்து வந்த மகனை தந்தையும், சகோதரனும் சேர்ந்து கொலை செய்து எரித்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மதுரவாயல் வாநகரம் மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஆசைமணி. இவருக்கு வயது 60. இவருக்கு அஜய் மற்றும் விஜய் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர்களில் விஜய்க்கு 7 ஆண்டுகளுக்கு முன்னால் திருமணம் நடந்து ஒரே மாதத்தில் மனைவியையும் பிரிந்துள்ளார். இதனால் தனது தந்தை மற்றும் சகோதரனுடன் வீட்டில் வசித்து வரும் விஜய் கஞ்சா மற்றும் மது போதைக்கு தீவிரமாக அடிமையாக உள்ளார். இதனால் தினமும் வீட்டில் பிரச்சனை செய்து வந்தார் என்று கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த தினத்தன்று விஜய் கடுமையான மதுபோதையில் வீட்டுக்கு வந்து தன் தந்தையுடனும், சகோதரனுடனும் சண்டை போட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த ஆசைமணி மற்றும் விஜயின் சகோதரர் இணைந்து கத்தியால் குத்தி கொலை செய்து பின் அவரின் உடலை வீட்டிற்கு பின்னால் உள்ள இடத்தில் எரித்துள்ளனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கொடுத்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விஜயின் தந்தை மற்றும் சகோதரனை கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.