Categories: தமிழகம்

‘என் பொண்டாட்டிய பிரிந்து வாழ நீதான் காரணம்’; ஆத்திரத்தில் மைத்துனரை வெட்டிக் கொன்ற நபர்… போலீஸில் சரண்..!

சென்னை : செங்குன்றத்தில் மனைவியை பிரிந்து வாழ மைத்துனரே காரணம் என்கிற ஆத்திரத்தில் அவரை அரிவாள்மனையில் வெட்டி கொன்று காவல் நிலையத்தில் சரணடைந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கிண்டி மடுவான்கரை முதல்தெருவை சேர்ந்தவர் செல்வக்குமார் (36). இவர் வெல்டராக தொழில் புரிந்து வருகிறார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக தனது மனைவியை பிரிந்து செங்குன்றம் நாரவாரிகுப்பம் வைத்தீஸ்வரன் தெருவில் உள்ள மைத்துனரான நாகராஜ் (25) என்பவரின் வீட்டில் தங்கி வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு இருவரும் மதுபோதையில் இருந்த‌போது, ‘எனது மனைவி பிரிந்து வாழ நீதான் காரணம்’, என கூறி தகராறில் ஈடுபட்டதில், ஆத்திரமடைந்த செல்வக்குமார் வீட்டிலுள்ள அரிவாள்மனையால் தீடீரென மைத்துனர் நாகராஜை கழுத்து, முகம் ஆகிய பகுதிகளில் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே அவர் இரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

பின்னர், செங்குன்றம் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்து நடந்தவற்றை போலீசாரிடம் கூறினார். உடனடியாக போலீசார் சம்பவத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டு உயிரிழந்து கிடந்த நாகராஜ் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து செல்வக்குமாரை கைது செய்து விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

கோவை மருதமலை கோவில் கும்பாபிஷேகத்தில் விதி மீறல்? நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்!

கோவை அருள்மிகு மருதமலை முருகன் திருக்கோயிலில் அண்மையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறியதாகக்…

9 minutes ago

பூமாதா, கோமாதா… படத்தில் பேசிய வசனத்தால் ட்ரோலுக்குள்ளாகும் தமன்னா…

தமன்னாவின் புதிய திரைப்படம்… 2022 ஆம் ஆண்டு தெலுங்கில் “ஓடெலா ரயில்வே ஸ்டேஷன்” என்று ஒரு திரைப்படம் வெளிவந்தது. இதில்…

26 minutes ago

ஜெயலலிதாவுக்கு எதிராக பேச காரணம் என்ன? 30 ஆண்டுகளுக்கு பின் காரணத்தை கூறிய ரஜினிகாந்த்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலிலதாவை எதிர்த்து ரஜினிகாந்த் 1995ல் அனல் பறக்க பேசியது யாரும் மறக்க முடியாது. வெடிகுண்டு கலாச்சாரத்தை பற்றி…

36 minutes ago

பவன் கல்யாண் செய்த காரியத்தால் தேர்வை தவறவிட்ட மாணவர்கள்… பெற்றோர் கண்ணீர்!

ஆந்திர துணை முதல்வர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் பவன் கல்யாண் தற்போது ஆந்திரா மாநிலத்தின் துணை…

1 hour ago

19 வயது இளம்பெண்ணை சீரழித்த 23 பேர் : 7 நாட்களாக நடந்த கூட்டுப்பாலியல் பலாத்காரம்!

19 வயது இளம்பெண்ணை 23 பேர் 7 நாட்களாக கூட்டுப் பாலியல் செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்து. உத்தரபிரதேச மாநிலம்…

2 hours ago

சூப்பர் ஹீரோ திரைப்பட நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கப்போகும் சீனா?

வணிக போர் சீனா மீதான வணிகப் போரை தொடங்கியிருக்கிறது அமெரிக்கா. இந்த இரு நாடுகளும் உலகின் மிகப் பெரிய சக்தி…

2 hours ago

This website uses cookies.