2 நாள் விலை உயர்வுக்குப் பிறகு வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதல்.. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் தெரியுமா..?

Author: Babu Lakshmanan
24 March 2022, 8:23 am

சென்னை: சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 2 நாட்கள் உயர்ந்து காணப்பட்ட நிலையில், இன்று வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.

இதற்கிடையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சற்று குறைத்தது. இந்த விலைக்குறைப்பு அமலுக்கு வந்தது முதல் பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றமில்லை.

இதனால், சென்னையில் கடந்த பல நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40 ஆகவும், டீசல் ரூ.91.43 ஆகவும் விற்கப்பட்டது. 137 நாட்களுக்கு பிறகு கடந்த மார்ச் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் விலை உயர்ந்து காணப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமுமின்றி நேற்றைய விலையிலே விற்பனையாகி வருகிறது. அதாவது, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40 ஆகவும், டீசல் ரூ.91.43 ஆகவும் நேற்று விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றமின்றி அதே விலை நீடிக்கிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.91 ஆகவும், டீசல் ரூ.92.95 ஆகவும் விற்கப்பட்டு வருகிறது.

  • ajith-sir-gives-the-title-good-bad-ugly-said-by-adhik-ravichandran டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்