தமிழகம்

நாங்களே சொல்லுவோம்.. Fine-ம் போடுவோம்.. வேளச்சேரிவாசிகள் குமுறல்!

சென்னை வேளச்சேரியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

சென்னை: கடந்த இரு நாட்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், அக்.15 முதல் 18 வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கும் மற்றும் வடமாவட்டங்களுக்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

இதனையொட்டி, சென்னை மாநகராட்சி தரப்பில் 100க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த நான்கு நாட்களுக்கு 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் வேலை செய்வதற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அரக்கோணம் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் சென்னை விரைந்துள்ளன.

இதையும் படிங்க: நாங்க எப்பவுமே உஷார்தான்.. வேளச்சேரி பாலத்தில் கார்களை பார்க்கிங் செய்த உரிமையாளர்கள் ; வீடியோ!

இதனிடையே, சென்னை வேளச்சேரி பகுதி மக்கள் வேளச்சேரி – பள்ளிக்கரணை மேம்பாலத்தில் தங்களது கார்களை நிறுத்தி வைத்தனர். ஏனென்றால், சென்னையில் பெய்யும் மழைநீர் ஓடி வந்து வேளச்சேரி சதுப்பு நிலம் வந்தடையும். மேலும் கடந்த முறை மழை பெய்தபோது வேளச்சேரி பகுதி முழுவதும் பெருத்த சேதம் அடைந்தது. அதிலும், பலரது கார்கள் வெள்ள நீரில் மூழ்கி சேதத்தை உண்டாக்கியது.

இந்த நிலையில், வேளச்சேரி – பள்ளிக்கரணை மேம்பாலத்தில் நின்றிருந்த கார்களுக்கு ஒரு நாளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், ரூபாய் போனாலும் பரவாயில்லை, காரின் பாதுகாப்பு முக்கியம் என அதன் உரிமையாளர்கள் ஊடகம் வாயிலாக தெரிவித்துள்ளனர். அதேநேரம், பருவமழை முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசு, இந்த விஷயத்தில் தவறாக நடக்கிறது என பொதுமக்கள் தங்கள் வேதனையை தெரிவித்தனர்.

Hariharasudhan R

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

14 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

14 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

15 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

15 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

16 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

16 hours ago

This website uses cookies.