சென்னை அருகே தகாத உறவில் இருந்த பெண்ணின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த காவலர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
ஆலந்தூர் காவல் குடியிருப்பில் வசித்து வருபவர் பாண்டியராஜ். 50 வயதான இவர் சென்னை மாநகர காவல் துறையில், விஐபிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், கணவனை இழந்து மகளுடன் வசித்து வரும் பெண்னுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
கணவனை இழந்த தனக்கு காவலரின் அரவணைப்பு பாதுகாப்பானது என்று நம்பி, அந்தப் பெண்ணும் காவலர் பாண்டியராஜனிடம் நெருக்கமாக பழகி வந்துள்ளார். தனது உடல்தேவைக்கு அந்தப் பெண்ணை பயன்படுத்தி வந்த அந்தக் காவலர், அந்தப் பெண்ணின் மகளையும் சித்ரவதை செய்து வந்துள்ளார்.
2017ம் ஆண்டு அந்தப் பெண்ணின் குழந்தைக்கு 13 வயது பூர்த்தி அடைந்துள்ளது. அன்று முதல், நாட்கள் செல்ல செல்ல சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். தற்போது, அந்தப் பெண் கல்லூரிக்கு செல்லும் நிலையிலும், மிரட்டி மிரட்டி, தனது இச்சையை தீர்த்து வந்துள்ளார்.
காவலரின் கொடுமை தாங்காத அந்த சிறுமி, காவல்நிலையத்திற்கு சென்று புகாராக அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், காவல் உதவி ஆய்வாளர் பாண்டியராஜ், பாலியல் தொந்தரவு மற்றும் வன்கொடுமை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, பாண்டியராஜனை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…
தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…
This website uses cookies.