தனது குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்தது தொடர்பான விவகாரத்தில் தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கேட்டு மகளுடன் காவலர் ஒருவர் சென்னையில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
சிறுநீரக பிரச்சனை காரணமாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், ஓட்டேரி காவல்நிலையத்தைச் சேர்ந்த தலைமை காவலர் கோதண்டபாணி என்பவர் தனது 10 வயது மகளை சிகிச்சைக்காக அனுமதித்தார். ஆனால், அங்கு அவருக்கு தவறான சிகிச்சை அளித்த காரணத்தினால் மகளின் கால் பாதிக்கப்பட்டதாகக் கூறி கடந்த ஏபரல் மாதம் சென்னை தலைமைச் செயலகத்தின் முன்பு காவலர் கோதண்டபாணி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது தொடர்பாக தேசிய குழந்தைகள் ஆணையம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. சம்பவம் நடந்து 4 மாதங்களுக்கு பிறகு, தற்போது அவருடைய மகளுக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்குவதாக குழந்தைகள் நல ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆனால், இதனை ஏற்க மறுத்த காவலர் கோதண்டபாணி, சுதந்திர தினமான இன்று டிஜிபி அலுவலகத்தின் முன்பு மீண்டும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் கூறியதாவது ;- மருத்துவமனை நிர்வாகம் தவறான சிகிச்சை அளித்தது குறித்து எந்த ஒரு விளக்கமும் இதுவரை கொடுக்கவில்லை. அந்த விளக்கம்தான் எனக்கு வேண்டுமே தவிர, மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் தேவையில்லை, எனக் கூறி காமராஜர் சாலையில் டிஜிபி அலுவலகம் முன்பு இன்று மகளுடன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், எங்கள் இருவரையும் கருணை கொலை செய்து விடுங்கள் எனவும் காவலர் கோதண்டபாணி கோரிக்கை வைத்தார். சுமார் 20 நிமிடம் தன் மகளுடன் சாலையில் தர்ணாவில் ஈடுபட்டிருந்த தலைமை காவலரை மெரினா காவல் நிலைய காவலர்கள் சாமதானம் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.