சென்னையில் கஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள், கத்தியுடன் காவலரை துரத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காட்டுப்பாக்கம் ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்த திருமாவளவன், நேற்று முன்தினம் அப்பகுதியில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்றிருந்தார். அப்போது, கஞ்சா போதையில் இருந்த 3 பேர் சாலையில் அவரை வழிமறித்து, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
ஆனால், தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால், ஆபாசமான வார்த்தைகளால் திட்டியும், தாக்கியும் உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த திருமாவளவன், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு போலீஸ் கான்ஸ்டபிள் சரவணன் உடனடியாக வந்தார்.
அங்கு பணம் கேட்டு தாக்குதலில் ஈடுபட்ட நபர்களைப் பிடிக்க முயற்சி செய்தார். அப்போது, போலீஸ்காரர் என்று கூட பார்க்காமல், கஞ்சா போதையில் இருந்த நபர், சிறிய கத்தியால் தன்னைக் கிழித்துக் கொண்டதோடு, காவலரை நோக்கி அச்சுறுத்தும் வகையில் கையில் கத்தியுடன் துரத்தினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த காவலர் சரவணன் அங்கிருந்து தப்பியோடினார்.
இதைத் தொடர்ந்து, பூவிருந்தவல்லி போலீசார், கஞ்சா போதையில் இருந்த 3 பேரையும் பிடித்து விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதில் காவலரை கஞ்சா போதை ஆசாமிகள் மிரட்டிய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
சமீபத்தில், பிரபலமான ஹாலிவுட் வெப் தொடரான Wednesday சீசன் 2-ன் டிரெய்லர் வெளியாகி, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…
கோவை விமான நிலையத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையும் படியுங்க:…
This website uses cookies.