தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். தற்போது சென்னையில் கொலை சம்பவங்கள் தொடர்ந்து வருவதால் தலைநகரம் கொலை நகரமாக மாறி வருகிறதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சென்னை போரூரை அடுத்த ஐயப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்த தமிழ் என்ற நபர் மீது, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுக்கு தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தமிழ் மற்றும் காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த சபரி என்ற ரவுடிக்கு முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று, தமிழ் தனது வீட்டிற்கு அருகில் நின்று கொண்டிருந்தபோது, இதை அறிந்த சபரி, தனது கூட்டாளிகளுடன் ஐந்து இருசக்கர வாகனங்களில் அங்கு வந்துள்ளார். தனியாக நின்ற தமிழை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் நேரடியாக தாக்கியுள்ளனர்.
இதில், தமிழ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். பின்னர், சபரியின் குழு இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றுள்ளது.
செல்லும் வழியில் நின்று கொண்டிருந்த கார்கள் மற்றும் பைக்குகளையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். சிசிடிவி காட்சிகளில், அவர்கள் அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் செல்லும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
படுகாயமடைந்த தமிழை போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். போரூர் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
புதிய பெயருடன் கெளதம் கார்த்திக் சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி தன்னை ரவி மோகன் என்று இனிமேல் அழைக்குமாறு அறிக்கை…
This website uses cookies.